மயிலாடுதுறை, ஜன.18 - விவசாயத்தை சீரழிக்க ஒன்றிய மோடி அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் தில்லியில் ஓராண்டு காலம் தொடர் போராட்டங்களை கடுங்குளிரிலும், மழை, வெயில், கடுமையான அடக்கு முறைகளையும் மீறி விவசா யிகள் நடத்தியதன் விளை வாக ஒன்றிய பாஜக அரசு அச்சட்டங்களை ரத்து செய் தது. விவசாயிகளின் இந்த போ ராட்ட வெற்றியை கொண்டா டும் விதமாக இந்திய ஜனநா யக வாலிபர் சங்கம் சார்பில் மயிலாடுதுறை மாவட்டத் தில் ஏராளமான இடங்களில் பொங்கல் விளையாட்டு விழாக்கள் நடைபெற்றன. பாரம்பரிய கலைகள், விளை யாட்டுகள் என நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஒவ்வொரு கிராமங்களிலும் சிறுவர்கள், இளைஞர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட் டம், பொறையார் அருகே யுள்ள பூதனூர் கிராமத்தில் சங்கத்தின் கிளை தலைவர் அபிமன்யூ தலைமையில் நடைபெற்ற விழாவில், சங்கத்தின் மாவட்ட செய லாளர் சிங்காரவேலன், ஒன்றிய தலைவர் பவுல் சத்தி யராஜ், விவசாய தொழிலா ளர் சங்க மாவட்ட தலைவர் காபிரியேல் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக விவசா யிகளின் போராட்ட வெற்றியை கொண்டாடும் விதமாக நடைபெற்ற சுடர் ஓட்ட த்தை திமுக புதுச்சேரி மாநில விவசாய அணி அமைப்பாளர் கொன்னகா வளி பிரபு துவக்கி வைத் தார். மாலை வரை நடை பெற்ற நிகழ்ச்சியில் ஏராள மான குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் பங்கேற்றனர். கிளை பொருளாளர் பால முருகன், சிபிஎம் கிளை செயலாளர் செல்லப்பா, மாணவர் சங்க ஒன்றியக் குழு உறுப்பினர் காரல்மார்க்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக கிளைச் செயலாளர் விஜயரா கவன் நன்றி கூறினார்.