திருச்சிராப்பள்ளி, மே 19-
தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விளையாட் டுத் துறையில் சாதனைகள் படைப் பதற்கு ஏற்ப நல்லபயிற்சி, தங்கு மிட வசதி மற்றும் சத்தான உணவு டன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளை யாட்டு மையங்கள் திருச்சி, தஞ்சா வூர், அரியலூர் உள்பட பல மாவட்டங் களில் செயல்பட்டு வருகின்றன.
விளையாட்டு விடுதிகளில் உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 7-ஆம் வகுப்பு, 8- ஆம் வகுப்பு, 9-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு சேர்க்கையும் முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 6-ஆம் வகுப்பு, 7-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் சேர்க்கையும் மாணவ, மாணவி யர்களுக்கு அண்ணாவிளையாட்ட ரங்கில் மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வரும் 24-ஆம் தேதி(புதன்கிழமை) காலை 7 மணி யளவில் நடைபெறவுள்ளது.
எனவே, விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவ, மாணவியர் 2023 -2024 ஆம் ஆண்டு விளையாட்டு விடுதி மற்றும் முதன்மைநிலை விளையாட்டு மையத்தில் சேர்வ தற்கான படிவங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதள முக வரியில் மே 23 அன்று மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்யலாம். மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றிபெற்ற மாணவர் களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளை ஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம் திருச்சி. (தொலைபேசிஎண் 0431-2420 685) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்படு கிறது.
மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.