சிஐடியு வலியுறுத்தல் திருவாரூர், பிப்.25- தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக ஊழியர்கள் சங்கம் (சிஐடியு) மாநில துணை பொதுச் செயலாளர் ஆர்.மோகன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: திரு வாரூர் மாவட்டத்தில் தற்போது நேரடி கொள்முதல் நிலையத்தில் சம்பா மற்றும் குறுவை நெல் பயிர்களை கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கடும் இயற்கை சீற்றத்திற்கு இடையே விவசாயிகளின் கடுமை யான பொருளாதார இழப்புகளை சந்தித்தும் விவசாயிகள் இந்த ஆண்டும் கடுமையான சாகுபடி பணியில் ஈடுபட்டு தற்போது சம்பா மற்றும் குறுவை நெல் பயிர்களை அறுவடை செய்து அரசின் நேரடி கொள்முதல் நிலையத்திற்கு விற்ப னைக்கு கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகளின் தொடர் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு எடுத்த தொடர் முயற்சியால் 20 சதவீத ஈரப்பத நெல்லையும் கொள்முதல் செய்யலாம் என ஒன் றிய அரசின் உத்தரவுப்படி தற் போது அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதல் அறு வடை பணியில் அறுவடை செய்த நெல் மூட்டைகள் தற்போது வரை நெல் கொள்முதல் மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இத னால் கடந்த ஒரு வாரமாக அறு வடை செய்த நெல் பயிர்களை விவ சாயிகளிடம் இருந்து உடனடியாக கொள்முதல் செய்ய முடியாத நிலை மாவட்டம் முழுவதும் நிலவு கிறது. எனவே விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் நெல்லை நேரடி கொள்முதல் நிலை யத்தில் இருப்பு வைக்காமல் உட னடியாக கிடங்குக்கு அனுப்பும் பணியை அரசு உடனடியாக மேற் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.