districts

img

பட்டு வளர்ப்பில் சிறப்புடன் ஈடுபடும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கல்

மயிலாடுதுறை, ஏப்.6 -  மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் பட்டு வளர்ப்பு துறை யின் சார்பில் சிறந்த முறையில் பட்டு வளர்ப்பு மேற்கொண்டு வரும் முதல் மூன்று பட்டு விவசாயிகளுக்கு பரிசு தொகையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். பரிசுகளை வழங்கி மாவட்ட ஆட்சி யர் பேசுகையில், மயிலாடுதுறை மாவட்டத் தில் சிறந்த முறையில் பட்டு புழு வளர்ப்பு  மேற்கொண்டு வரும் பட்டு விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பட்டு வளர்ச்சித் துறையின் மூலமாக சிறந்த மூன்று  பட்டு விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு ரொக்க தொகை பரிசாக வழங்கப்பட்டது. அதன்படி 2021-2022 ஆம் ஆண்டுக்கான மாநில திட்டம் மூலமாக மயிலாடுதுறை மாவட்ட பட்டு விவசாயிகளான குத்தா லத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் என்பவ ருக்கு முதல் பரிசாக ரூ.25,000 ரொக்க தொகை யும், முடிதிருச்சம்பள்ளியை சேர்ந்த விவசாயி  ராஜராஜன் என்பவருக்கு இரண்டாம் பரிசாக  ரூ.20,000 ரொக்க தொகையும், மன்னம் பந்தலை சேர்ந்த விவசாயி அகிலா என்பவ ருக்கு மூன்றாம் பரிசாக ரூ.15,000 ரொக்க தொகையும் வழங்கப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் ரங்க பாப்பா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.