districts

எஸ்.சி, எஸ்.டி தொழில் முனைவோர்களுக்கு சிறப்புத் திட்டம்

திருச்சிராப்பள்ளி,  மே 25-

     அரசு செயல்படுத்தி வரும் தொழில்முனைவோர் ஊக்குவிப்புத் திட்டங்களின் கீழ் மானியம் பெறுவதில் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவுத் தொழில்முனைவோரின் பங்கினை அதிகரிக்க தமிழ்நாடு அரசு, எஸ்.சி  மற்றும் எஸ்.டி பிரிவுத் தொழில் முனைவோர்க் கெனப் பிரத்யேக சிறப்புத் திட்டமாக அண்ணல் அம்பேத்கர் வெல்லும் தொழில் முனைவோர் - பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ், ஆர்வமுள்ள புதிய தொழில் முனைவோர் முன்மொழி யும், நேரடி வேளாண்மை தவிர்த்த, உற்பத்தி, வாணிகம் மற்றும் சேவை  சார்ந்த எந்தத் தொழில் திட் டத்துக்கும் கடனுதவியோடு இணைந்த மானியம் வழங்கப் படும்.  

   மானியம் மொத்த திட்டத்  தொகையில் 35 சதவிகிதம் ஆகும். மானிய உச்ச வரம்பு  ரூ.1.5 கோடி. மேலும் கடன்  திரும்பச் செலுத்தும் காலம்  முழுவதும் 6 சதவிகிதம் வட்டி  மானியமும் வழங்கப்படும். தொழில்முனைவோர் தம்  சொந்த நிதியில் செயல்படுத் தும் திட்டங்களுக்கும் மானி யம் உண்டு.

     இத்திட்டத்தின் கீழ் பயன் பெற, விண்ணப்பதாரர் களுக்கு எந்த கல்வித் தகுதி யும் தேவையில்லை. மொத்த  திட்டத் தொகையில் 65 சத விகிதம் வங்கிக் கடனாக ஏற்பாடு செய்யப்பட்டு 35 சத விகிதம் அரசின் பங்காக முன் முனை மானியம் வழங்கப்ப டும். எனவே, பயனாளர் களுக்குத் தம் பங்காக நிதி  செலுத்த வேண்டிய தேவை  இருக்காது.

   தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும்  குறிப்பிட்ட திட்டம் தொடர் பான சிறப்புப் பயிற்சி  அல்லது திறன்மேம்பாட்டுப்  பயிற்சி தொழில்முனை வோர் மேம்பாடு மற்றும் புத் தாக்க நிறுவனம் மூலமாக இலவசமாக வழங்கப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் பயன் பெற திட்ட அறிக்கை மற்றும்  ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in  என்ற தளத்தில் இணையவழி யாக விண்ணப்பிக்க வேண் டும். ஆர்வமுள்ள தொழில் முனைவோர்க்குத் தேவை யான ஆலோசனைகள், வழி காட்டுதல்கள், திட்ட அறிக்கை தயாரித்தல், விண் ணப்பித்தல் தொடர்பான உதவிகள் மாவட்டத் தொழில் மையத்தில் வழங்கப்படும். கடன் பெறு வது தொடர்பாக நிதி நிறு வனங்களுடன் இணைப்புப் பாலமாகவும் மாவட்டத் தொ ழில் மையம் விளங்கும்.  

    தகுதியும் ஆர்வமும் கொண்ட எஸ்., எஸ்.டி  தொழில்முனைவோர் மற்றும் அவர்களுக்கு உரி மையான தொழில் அலகுகள்  இத்திட்டத்தின் கீழ் பயன் பெற வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்படு கிறது. மேலான விவரங் களை பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம்,  மாவட்ட ஆட்சியர் அலுவலக  சாலை, திருச்சிராப்பள்ளி யினை நேரடியாகவோ அல்லது 0431-2460823 என்ற தொலைபேசி எண்ணிலோ அணுகலாம்.  

   ஆர்வமுள்ள எஸ்.சி  மற்றும் எஸ்.டி பிரிவு தொழில் முனைவோர் இக்கூட்டத்தில் பங்கேற்றுப் பயன்பெற்று அனைவரையும் உள்ளடக் கிய வளர்ச்சியை எட்டுவ தான தமிழ்நாடு அரசின் நோக்கம் நிறைவேறப் பங்க ளிக்குமாறு மாவட்ட ஆட்சி யர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.