districts

தைலமரக் காடுகளை அப்புறப்படுத்த தனிக்கவனம்

அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தகவல்

புதுக்கோட்டை, ஏப்.25-

    தைலமரக் காடுகளை அப்புறப்படுத்த தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தெரிவித்தார். புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:-

   புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தைல மரங்களை அப்புறப்படுத்துவது வனத்துறை மூலமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை. தைல மரங்களை அகற்று வதற்கு குறித்து தனிக்கவனம் செலுத்தி, முதல்வரின் கவ னத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள் ளப்படும்.

   புதிதாக தைல மரங்களை நடுவது இல்லை. தற்போ துள்ள மரங்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் என்ன செய்வது என்பது அரசின் கொள்கை முடிவு. அதற்குப் பிறகுதான் நடவடிக்கை மேற்கொள்ள முடியும். வனத்  துறை மூலம் துறையின் அமைச்சரும், அரசுச் செயல ரும் அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று பேசி வரு கின்றனர் என்றார் மெய்யநாதன்.