புதுக்கோட்டை, செப்.25- புதுக்கோட்டை மாவட் டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், கைக்குறிச்சி, ஸ்ரீ பாரதி மகளிர் பொறியியல் கல்லூரியில், முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற் றாண்டு விழாவினை முன் னிட்டு சிறப்புக் கல்வி கடன் முகாம் திங்கள்கிழமை நடை பெற்றது. ஆட்சியர் கவிதா ராமு தலைமை வகித்தார். மாநிலங்களவை உறுப்பி னர் எம்.எம்.அப்துல்லா முன் னிலை வகித்தார். சுற்றுச் சூழல் துறை அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன் முகாமி னைத் தொடங்கி வைத்து கல்விக் கடன்பெறுவதற் கான ஆணைகளை வழங்கி னார். முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கலை மற்றும் அறிவியியல் கல்லூரி, பொறியியல் கல் லூரி, பாலிடெக்னிக் கல் லூரி, மருத்துவக் கல்லூரி, பயிற்சி கல்லூரி, நர்சிங் கல் லூரி மற்றும் மாநில, ஒன்றிய அரசின் பதிவு பெற்ற அனைத்து வகையான கல் லூரி மாணவ, மாணவிகள் சிறப்புக் கல்வி கடன் முகா மில் கலந்துகொண்டனர். நிகழ்வில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை, தமிழ்நாடு சிறப்புத் திட்ட ஆலோச னைக் குழு உறுப்பினர் ஜெ. வணங்காமுடி, ஸ்ரீ பாரதி கலைக் கல்லூரி இயக்குநர் குமுதா, கல்லூரி முதல்வர் கவிதா உள்ளிட்டோர் பங் கேற்றனர்.