திருவாரூர், ஆக.17 - அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தேசிய கவுன்சில் கூட்ட முடிவுகள் மற்றும் உறுப்பினர் விஸ்தரிப்பு உள்ளிட்ட முடிவுகளை விளக்கி பேரவை நடைபெற்றது. விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் திருவாரூரில் நடந்த மாவட்ட பேரவைக்கு, அமைப்பின் மாவட்டப் பொருளாளர் ஆறு.பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி துவக்கி வைத்து பேசினார். விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலை வரும், கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை தேசிய கவுன்சில் கூட்டம் முடிவுகளை விளக்கி யும், அமைப்பின் விஸ்தரிப்பு, உறுப்பினர் சேர்க்கை மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தியும் சிறப்பு ரையாற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜாக்குலின்மேரி மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.