districts

img

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் எதிர்காலம்?

திருச்சிராப்பள்ளி, செப்.14- திருச்சிராப்பள்ளி மாநகராட்சி யில் நிரந்தரப் பணியிடங்களில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் இன்னும் மூன்று அல்லது நான்  காண்டுகளில் பணி ஓய்வு பெற வுள்ளனர். இதைத் தொடர்ந்து சுகா தாரப் பணிகளை மேற்கொள்வதில் கடும் ஆட்கள் பற்றாக்குறை ஏற் படும்.  திருச்சிராப்பள்ளி மாநகராட்சி யில் பணியாற்றும் தூய்மைப்  பணியாளர்களில் பெரும் பகுதி யினர் மூன்று ஆண்டுகளுக்குள் ஓய்வு பெற உள்ளனர். சமீபத்திய தகவல்களின் அடிப்படையில் சுமார் 1,100 தூய்மைப் பணியா ளர்கள் மாநகராட்சி வழங்கும் ஊதி யத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் 1994-ஆம் ஆண்டு மாநகராட்சியின் கீழ்  இணைக்கப்பட்ட பழைய திருச்சி ராப்பள்ளி, ஸ்ரீரங்கம் மற்றும் கோல்  டன் ராக் நகராட்சிகளில் பணியில்  சேர்ந்தவர்கள் பின்னர் அவர்கள்  மாநகராட்சியின் கீழ் கொண்டுவரப்  பட்டவர்கள். இவர்கள் அனை வரும் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்கள். இவர்களில் கிட்டத்தட்ட 70 சத வீதத் தொழிலாளர்கள் 54 முதல் 55 வயதுக்குட்பட்டவர்கள். இவர்கள்  மூன்று முதல் நான்கு ஆண்டு களில் ஓய்வு பெற உள்ளனர். அதா வது, சுமார் 700 தொழிலாளர்கள் அடுத்தடுத்து ஓய்வு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது,  இதனால் நகரத்தில் திடக்கழிவு  மேலாண்மைக்காகப் பயன்படுத்  தப்படும் தூய்மைப் பணியாளர் களில் பெரும் பற்றாக்குறை ஏற் படும். இந்தத் தொழிலாளர்கள் 2008-09-ஆம் ஆண்டுகளில் தெருக்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள  கழிவுகளை அகற்றுவது, பேருந்து  நிலையங்கள் மற்றும் காய்கறி மற்றும் பழ சந்தைகளிலிருந்து தின சரி சேகரிக்கப்படும் குப்பைகளை உரம் தயாரிக்கும் மையத்திற்குக் கொண்டு செல்லும் பணிகளை மேற்கொண்டு வந்தனர். கருணை அடிப்படையில் நிய மிக்கப்பட்டவர்களைத் தவிர 15  ஆண்டுகளுக்கும் மேலாக ஆள் சேர்ப்பு நடைபெறவில்லை மாறாக,  தற்காலிகப் பணியாளர்களைக் கொண்டு மாநகராட்சி நிலைமை யைச் சமாளித்தது.  2016-17 ஆம் ஆண்டில், குப்பை  சேகரிப்பது உள்ளிட்ட சில பணி களில் சுய உதவிக் குழுக்களைப்  பயன்படுத்தத் தொடங்கியது. இவர்களுக்குத் தினக்கூலியாக நாள் ஒன்றுக்கு ரூ.557 வழங்கப் பட்டதாகக் கூறப்படுகிறது.  ஜூன் மாதம் திடக்கழிவு மேலாண்மையை மாநகராட்சி அவுட்சோர்சிங் முறைக்கு மாற்றி யதால் அங்குப் பணியாற்றிய நிரந்  தர ஊழியர்கள் சாலைகளைச் சுத்  தம் செய்வது, மழைநீர் வடிகால்  களில் தேங்கியுள்ள மண்ணை  அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள னர்.

பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் ஓய்வு பெறுவ தால், நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2026-ஆம் ஆண்டு  அநேகமாக 400-ஆகக் குறைந்து  விடும் என்று எதிர்பார்க்கப்படு கிறது, இதன் மூலம் நகரத்தில் திடக்  கழிவு மேலாண்மையின் செயல் திறன் என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது. திருச்சிராப்பள்ளி மாநக ராட்சிக் குப்பைகளைச் சுத்தம் செய்  வதற்குச் சுயஉதவிக் குழுக்  களையே பெரிதும் நம்பியிருக்கி றது. இருப்பினும் நிரந்தரப் பணி யிடங்களில் தூய்மைப் பணியா ளர்களை நியமிப்பது அவசியம் என்கிறார் மாநகராட்சியின் மூத்த அதிகாரி ஒருவர். இல்லையெனில் நகரில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந் தம் பெற்ற தனியார் நிறுவனத்தை நம்பவேண்டும் என்கிறார். சிஐடியு கோரிக்கை தமிழகத்தின் தூய்மை நகர மாக முதலிடத்திலும் இந்திய அள வில் ஆறாவது இடத்திலும் திருச்சி ராப்பள்ளி தேர்வாகி உள்ளதென்  றால் இப்பகுதி உழைப்பாளர் களின் உழைப்பும் அடங்கியுள்ளது என்பது தான் உண்மை. சமூகப்பாதுகாப்புடன் வேலை,  நிரந்தரப்பணியில் நிரந்தர ஊழியர், குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.26,000 வழங்கவேண்டுமென சிஐடியு தொடர்ந்து தனியாகவும் கூட்டாகவும் போராடி வருகிறது.  இதைக் கணக்கில் கொண்டு திருச்சி ராப்பள்ளி மாநகராட்சி மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள ஊராட்சி முழு வதும் துப்புரவுப் பணியில் நிரந்தர  ஊழியர்கள் அமர்த்தப்பட வேண்டு மென்பதே உள்ளாட்சி ஊழியர் களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்  றார் திருச்சிராப்பள்ளி சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன்.