districts

ஆஸ்திரேலியாவில் விற்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலை கும்பகோணம் வந்தது

கும்பகோணம், ஏப்.26-

   அரியலூர் மாவட் டம் செந்துறை அருகே உள்ள பொட்டவெளி வேலூர் கிராமத்தில் வர தராஜ பெருமாள் கோவில்  உள்ளது. இந்த கோவி லில் இருந்த வரதராஜ  பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் ஆஞ்ச நேயர் உள்ளிட்டசிலை கள் திருட்டுப் போனது.  

  இது தொடர்பாக கடந்த 2012-ஆம் ஆண்டு செந்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில்  2020-ஆம் ஆண்டு காவல்துறை இயக்குநர் உத்தரவின் பேரில் சிலைத் திருட்டு வழக்கு விசாரணை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. அவர்கள்  நடத்திய விசாரணையில் செந்துறை வரத ராஜ பெருமாள் கோவிலில் இருந்து திரு டப்பட்ட உலோகச் சிலைகளில் ஒன்றான  ஆஞ்சநேயர் சிலை அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள கிறிஸ்டி அருங்காட்சி யகத்தில்  காட்சிப்படுத்தப்பட்டதும்  அங்கி ருந்து ஏலம் விடப்பட்டதும், அது ஆஸ்திரே லியாவைச் சேர்ந்த அமெரிக்கக் குடிமகன் ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டதும் கண்டறியப்பட்டது.

 வரதராஜபெருமாள் கோவில் ஆஞ்ச நேயர் சிலையின் புகைப்படத்தையும் கிறிஸ்டி அருங்காட்சியகத்தில் ஏலம் விடப்  பட்ட ஆஞ்சநேயர் சிலையின் புகைப் படத்தையும் தொல்லியல் துறை உதவி யோடு ஒப்பீடு செய்து பார்த்தபோது இரண்டு புகைப்படங்களிலும் இருப்பது ஒரே சிலை  என்பது உறுதியானது. இதையடுத்து வரத ராஜ பெருமாள் கோவிலில் இருந்து திரு டப்பட்ட சிலையை மீட்க காவல்துறை தலைமை இயக்குநர் மூலம் தமிழக அர சின் உள்துறைக்கு சிலை கடத்தல் தடுப்புப்  பிரிவு சார்பில்  கடிதம் அனுப்பப்பட்டது  

  இந்த சட்ட நடவடிக்கைகள் காரணமாக   ஆஞ்சநேயர் சிலையை  ஏலம் எடுத்த  ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் சம்  பந்தப்பட்ட ஆஞ்சநேயர் சிலையை ஆஸ்தி ரேலியாவில் உள்ள அமெரிக்கத் தூத ரகம் மூலம் இந்தியத் தூதரகத்தில் ஒப்ப டைத்தார். தொடர்ந்து  பரிசோதனை களுக்குப் பிறகு இந்திய தொல்லியல் துறை யிடம் ஒப்படைக்கப்பட்டது.  

  கடந்த 17-ஆம் தேதி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன் தலைமையில் தில்லி சென்ற  தனிப்படையினர்  ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலை யை இந்தியதொல்லியல் துறையிடமி ருந்து பெற்று சென்னை கொண்டு வந்தனர்.  

  இந்த நிலையில் சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரணை செய்யும்  கும்ப கோணத்தில் உள்ள சிலை திருட்டுத் தடுப்பு  சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.சிலை திருட்டு சம்பந்தமாக விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கும்பகோணத்தில் உள்ள சிலைகளை பாதுகாப்பு மையத்தில் வைக்க உத்தரவிட்டார்.