districts

img

கட்டிடப் பொறியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு

முசிறி, மே 5- முசிறி கட்டிடப் பொறியாளர் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா தனியார் மண்டபத்தில் சாசன தலைவர் பொறியாளர் வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது.  விழாவில் சங்கத் தலைவராக பொறியாளர் பூபதி, துணைத் தலைவராக சதீஷ்குமார், செயலாளராக ராஜா துணைச் செயலாளராக அரவிந்த், பொருளாளராக தினேஷ் ஆகியோர் ஒருமனதாக நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர்.  விழாவில் மண்டலத் தலைவர் பொறியாளர் ரவி, துணைத் தலைவர் விஜயா பானு, மாநிலச் செயலாளர் குழந்தைவேலு, மாநில துணைத் தலைவர் சிவகுமார், முன்னாள் மாநில செயலாளர் புருஷோத்தமன், முன்னாள் மாநில இணைச் செயலாளர் சுகுமார், முன்னாள் மண்டலத் தலைவர் சரவணன், திருச்சி மண்டல தலைவர் மணிகண்டன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.  ஆலோசனைக் குழுவில், பொறியாளர்கள் சந்திர சேகர், செந்தில்குமார், சரவணன், வெங்கடேசன், பொதுக்குழுவில் பொறியாளர்கள் ஜெயக்குமார், அருள் வேல், பழனிச்சாமி, ரவிசங்கர், செயற்குழு உறுப் பினர்களாக, பொறியாளர்கள் சரவணன், தாமரைச் செல்வன், ஆனந்த், குமரேசன், புஷ்பராஜ் உட்பட உறுப் பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.