உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்
புதுதில்லி, மே 3 -
ஒரே பாலின தம்பதிகளின் சமூகத் தேவை யை பரிசீலிக்க குழு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரி வித்துள்ளது.
ஒரே பாலின உறவாளர்கள் திரு மணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரி, இரண்டு ஒரே பாலின தம்பதியர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த மனுக்களில், “திருமணத்துக்கான இணையரைத் தேர்வு செய்யும் உரிமை எல்.ஜி.பி.டி.க்யூ. (Lesbian, Gay, Bisexual, Transgender, Queer or Questioning persons or the community - LGBTQ) சமூகத்தினருக்கும் நீட்டிக்கப்பட வேண்டும்; ஒரே பாலின திருமணத்தை அங்கீ கரிக்காமல் இருப்பது சமத்துவ உரிமை க்கும், வாழ்வுரிமைக்கும் எதிரானது. அர சியலமைப்புச் சட்டப்பிரிவு 14, 21-ஐ மீறுவ தாகும். எனவே, தன்பாலின உறவாளர்களின் திருமணத்தைத் சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் சட்டப் பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்த னர்.
ஆனால், “ஒரே பாலின உறவாளர்கள் திரு மண வாழ்க்கையை, இந்திய குடும்பமுறை யுடன் ஒப்பிட முடியாது. ஒரே பாலின உற வாளர்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளை யும் நடைமுறையில் இருக்கும் குடும்ப நடைமுறையுடன் ஒப்பிட முடியாது” என்று ஒன்றிய அரசு தெரிவித்தது.
கடைசியாக இந்த வழக்கு, கடந்த ஏப்ரல் 27 அன்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் சஞ்சய் கிஷன் கவுல், எஸ். ரவீந்திர பட், ஹீமா கோலி, பி.எஸ். நரசிம்மா ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் விசார ணைக்கு வந்தபோது, ஒரே பாலின தம்பதி கள் திருமணத்தை சட்ட ரீதியாக அங்கீ கரிக்காவிட்டாலும், அவர்களின் சமூகத் தேவைகளை பூர்த்தி செய்ய என்ன செய்ய லாம் என்பது தொடர்பாக தெரிவிக்குமாறு ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் தெரிவித்திருந்த னர்.
குறிப்பாக ஒரே பாலினத் தம்பதியர் இணைந்து கூட்டு வங்கி கணக்குகளை தொடங்க அனுமதி வழங்குவது, ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளில் வாழ்க்கை துணையை இணைப்பது உள்ளிட்ட நிர்வாக நடவடிக்கைகளில் அனுமதி வழங்கலாமா? என்பது தொடர்பாக தெரிவிக்குமாறு கூறியிருந்தனர்.
அதனடிப்படையில், ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் புதனன்று பதில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அதில், கேபினட் செயலர் அந்தஸ்தில் உள்ள ஓர் அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஒரே பாலின தம்பதி களுக்கான சமூகத் தேவைகள் பற்றி ஆராயப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஒன்றிய அரசுத் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிடும்போது, “ஒரே பாலினத்தவரின் திருமணங்கள் தொடர்பான விவகாரம் ஒன்றுக்கும் மேற்பட்ட அமைச்சகங்களை உள்ளடக்கியது என்பதால், ஒன்றிய அமைச்சரவை செயலாளர் தலைமையில் குழு ஒன்றை ஒன்றிய அரசு அமைக்க உள்ள தாகவும், வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரர் களும் தங்களுடைய கருத்துக்கள் மற்றும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பான விஷயங்களை தெரிவிக்கலாம்” என்றார்.
மேலும், “ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிக்கும் விவகாரத்தில், ஐரோப்பிய யூனியன் நாடுகளில் கூட ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. 46 நாடுகளில் வெறும் 6 நாடுகள்தான், ஒரேபாலின திருமணங் களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுத்துள் ளன. அதேபோல் ஐரோப்பிய யூனியன் அமைப்பு உறுப்பு நாடுகள் தன்பாலின திரு மணங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று நிர்பந்திக்கவில்லை” என்றும் விளக்கம் அளித்தார்.