புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பேராசிரியர் வீ. பாலமுருகன் தலைமை வகித்தார். பேராசிரியர்கள், மாணவ-மாணவியர், அலுவலகப் பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.