districts

img

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடக் கோரி பிரச்சாரம்

கும்பகோணம், ஜூலை 19-

    மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கை மற்றும் ஸ்மார்ட் மீட்டர் ஆபத்து குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் தஞ்சாவூர் மற்றும் கும்பகோணத்தில் நடை பெற்றது.

   தமிழ்நாடு மின் ஊழியர் மத்தியமைப்பு கும்பகோணம் கோட்டம் சார்பில் கும்பகோணம் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டது. பிரச்சாரத்திற்கு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்டச் செயலாளர் காணிக்கைராஜ் தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் உஸ்மான், இணைச் செயலாளர் ராதா தேவேந்திரன், வடக்கு கோட்டத் தலைவர் கோபால்சாமி, செயலாளர் செந்தில்வேல் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

     தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற பிரச்சாரத்திற்கு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் எஸ்.ராஜாராமன் தலைமை வகித்தார். பொருளாளர் சங்கர், நிர்வாகிகள், பொறியாளர் அமைப்பு சார்பாக வேல்முருகன், சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெய பால், சிஐடியு நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகிக்கப்பட்டது.  

    பட்டுக்கோட்டையில் மாவட்டத் தலைவர் ஏ.அதி தூத மைக்கேல் ராஜ், மாவட்ட துணை தலைவர் ஆரோக்கி யசாமி ஆகியோர் தலைமையில் பொதுமக்களை சந்தித்து  துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.