districts

img

சிறுதானிய உணவு விழிப்புணர்வு நடைபயணம்

நாகர்கோவில், செப். 17- உலக சுகாதார நிறுவனம் 2023-ஆம்  ஆண்டை சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித் துள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய சுகாதார நிறுவனமும் சிறுதானிய கழகமும் இணைந்து சிறுதானிய உணவினை உட்கொள்வதின் அவசியம் குறித்த விழிப்பு ணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவ தற்காக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த  ஏற்பாடு செய்துள்ளது. தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பல்வேறு பகுதிகளில் சிறுதானி யங்கள் பற்றிய கண்காட்சி, உணவு திருவிழா  மற்றும் நடை பயணம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல கன்னி யாகுமரி மாவட்ட தமிழ்நாடு உணவு  பாதுகாப்பு துறை சார்பில் கன்னியாகுமரி யில் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற  சிறுதானியங்கள் விழிப்புணர்வு நடை பயணம் நடை பெற்றது. நடைபயண தொடக்க விழா நிகழ்ச்சிக்கு  கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தலைமை தாங்கி னார். குமரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் நாகர் கோவில் ஆர்.டி.ஓ.சேதுரா மலிங்கம் சிறப்பு  விருந்தினராக கலந்துகொண்டு சிறுதானிய விழிப்புணர்வு நடைபயணத்தை கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.