districts

img

மகிமலை ஆற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரைச் செடிகள்!

மயிலாடுதுறை, நவ.13 - பொறையார் அருகே காழியப்பன்நல் லூர் ஊராட்சி கண்ணப்பமூலை மகிமலை ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரை செடி களை அகற்ற வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி  வட்டம் காழியப்பன்நல்லூர், எருக்கட்டாஞ் சேரி, பொறையார், காட்டுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் பரப்ப ளவில், மின் மோட்டார் மூலம் நிலத்தடி நீரை  பயன்படுத்தி விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரு கின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் பாசன வசதி பெறும் மகிமலை ஆற்றில் ஆகாய தாமரை செடிகள் படர்ந்து இருக்கின்றன. இத னால் மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட் டும் தண்ணீர் விவசாய  நிலங்களுக்கு செல்ல  முடியவில்லை. அடர்ந்து வளர்ந்துள்ள ஆகாயத் தாமரைகள் தண்ணீர் ஓட்டத்தை  தடுத்து தேக்க நிலையை ஏற்படுத்துகின்றன.  தற்போது பருவமழை பெய்து வருவ தால், வெள்ளம் ஏற்படும் முன்பே ஆற்றில் உள்ள ஆகாயத்தாமரை, செடி-கொடிகளை அகற்றி, சம்பா பயிர்களை காப்பாற்ற பொதுப் பணித்துறையினர் விரைந்து நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.