மன்னார்குடி, ஏப்.20-
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தின் துவக்க நிகழ்ச்சி மன்னார்குடி தேரடி பேருந்து நிலையம் அருகில் காந்தி சிலை எதிரில் நடை பெற்றது.
நிகழ்விற்கு மன்னார்குடி ஒன்றியச் செய லாளர் எம்.டி.கேசவராஜ் தலைமை வகித்தார். ஒன்றியப் பொருளாளர் ஆர்.ராஜ சேகர் முன்னிலை வகித்தார். மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஏ.அஸ்வத் அண்டோ ஆரோக்கியராஜ் முதல் கையெழுத் திட்டு துவக்கி வைத்தார். மன்னார்குடி காவல் ஆய்வாளர் எஸ்.ராஜேஷ் கண்ணன், சிபிஎம் நகரச் செயலாளர் ஜி.தாயுமானவன் மற்றும் மூத்த தொழிற்சங்க தலைவர்கள், பொது மக்கள் கையெழுத்திட்டனர்.