ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இதனொரு பகுதியாக திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் முதல் கையெழுத்து பெறப்பட்டது. மாவட்டத் தலைவர் பொன்மகள், மாவட்ட செயலாளர் சரஸ்வதி, காட்டூர் பகுதி நிர்வாகி எலிசபெத் ராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.