கும்பகோணம், ஜூன் 12-
கும்பகோணம் பகுதியில் பருத்தி எடுக்க கூலி ஆட்கள் கிடைக்காததாலும் பருத் திக்கு விலை நிர்ணயம் இல்லாததாலும் பருத்தி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றி யச் செயலாளர் பழனிவேல் தெரிவித்த தாவது:
காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா அறுவடைக்குப் பிறகு கோடை வெப்பத்தை சமாளிக்கும் வகையில் பருத்தி சாகுபடி செய்வதில் கும்பகோணம் திருவிடைமரு தூர் திருப்பனந்தாள் வட்டார பகுதி களில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வரு கின்றனர்.
கடந்த ஆண்டு பருத்திக்கு அதிகபட்ச விலை கிடைத்ததால் கும்பகோணம் சுற்று வட்டாரப் பகுதியில் வழக்கத்தை விட அதிக ஏக்கர் பரப்பளவில் இந்த ஆண்டு விவ சாயிகள் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆறு மாத காலப் பயிரான பருத்தியில் நடவு செய்த மூன்று மாதம் முதல் பருத்தி அறுவடை நடைபெறுவது வழக்கம். கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடவு செய் யப்பட்ட பருத்தி பயிர்கள் தற்போது நன்கு வளர்ந்து பருத்திக் காய்கள் முற்றி அறு வடைக்குத் தயாராக உள்ளது.
கடந்த சில தினங்களாக கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதியில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் பருத்திச் செடிகள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி உள்ளன.
மழை காரணமாக பருத்திச் செடிகள் முழுவதுமாக சேதம் அடைவதோடு பருத் திக் காய்கள் பழுப்பு அடைந்து பூஞ்சை கள் ஏற்படுகிறது. இதனால் பருத்தியின் தரம் குறைந்து ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.55 வரை மட்டுமே விற்கப்படுகிறது
தற்போது அறுவடைக்குத் தயாராக உள்ள பருத்தி பஞ்சுகளை எடுக்க அறுவடை செய்ய கூலி ஆட்களுக்கு கிலோ ஒன்றுக்கு பத்து ரூபாய் வழங்கப்படுகிறது. கூலித் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலி போதுமானதாக இல்லாததால் அவர்கள் மாற்றுத் தொழிலுக்கு செல்கின்றனர். எனவே விவசாயத் தொழிலாளர்கள் வேலைக்கு வருவதில் தொய்வு ஏற்பட்டுள் ளது.இதனால் விவசாயிகள் கவலை யில் உள்ளனர்.
இந்த நிலை நீடித்தால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கக் கூடும். அரசு தனிக் கவனம் செலுத்தி பருத்திக்கு உற் பத்திச் செலவினங்களில் இருந்து 50 சத வீதம் கூடுதலாக விலை நிர்ணயம் செய்து கொள்முதல் விலையை அறிவிக்க வேண் டும். இதன் மூலம் பருத்தி விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.