திருச்சிராப்பள்ளி, பிப்.19- விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி குண்டல புலியூரில் உள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் 143 பெண்கள் மற்றும் மாற்று திற னாளிகளுக்கும் மயக்க மருந்து கொடுத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியும், உடல் உறுப்புகளை வெளி நாடுகளுக்கு விற்பனை செய்ததைக் கண்டித்து மாதர் சங்கம் சார்பில் திருவெறும் பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் மாதர் சங்க தாலுகா செயலாளர் மல்லிகா குமார், மாவட்டச் செயலாளர் கோமதி, மாற்றுத்திறனாளி கள் சங்க ஒன்றியச் செயலா ளர் சித்ரா, தேவி உள்ளிட் டோர் பங்கேற்றனர். நாகப்பட்டினம் மாவட் டம் கீழையூர் ஒன்றியத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் மாவட்டத் தலைவர் கே. டி.எம். சுஜாதா, கீழ்வேளூர் தெற்கு ஒன்றியம் சாட்டிய குடியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் மாவட்டச் செய லாளர் டி.லதா, நாகை வடக்கு ஒன்றியம் சிக்க லில் நடைபெற்ற ஆர்ப்பாட டத்தில் மாவட்டப் பொருளா ளர் எஸ்.சுபாதேவி ஆகி யோர் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினர்.