திருச்சிராப்பள்ளி, ஜூன் 3-
பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங்கை பதவி நீக்கம் செய்து உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும், மல்யுத்த வீராங்கனைகள் மீதான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநா யக மாதர்சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வெள்ளி யன்று லால்குடி ரவுண் டானா அருகில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் விசாலாட்சி தலைமை வகித்தார். வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் ஆணை முத்து, மாவட்டத் தலை வர் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.