அரியலூர், ஆக.9-
ஜெயங்கொண்டம் சன் னதி தெருவில் சாலை நடுவே ஓடும் சாக்கடை கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சன்னதி தெருவில் 5 தேசிய மயமாக் கப்பட்ட வங்கிகள் செயல் பட்டு வருகின்றன. இதற்காக வாடிக்கையாளர்கள் ஏரா ளமானோர் வந்து செல் கின்றனர். மேலும் இப்பகுதி யில் தனியார் ஓட்டல்கள், தேநீர் விடுதிகள் உள்பட பல்வேறு கடைகள் இருப்ப தால், பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் முக்கியப் பகுதியாக உள்ளது.
இந்நிலையில் சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பு காரணமாக, சாலையின் நடுவே கழிவுநீர் செல்கிறது. இதனால் அப் பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சாலை முழுவதும் கழிவுநீர் செல்வ தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்ற னர்.
எனவே இங்குள்ள சாக் கடை கால்வாயில் ஏற்பட் டுள்ள அடைப்பை சரி செய்து, கழிவுநீர் சாக்கடை கால்வாய்க்குள் செல்ல நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.