மயிலாடுதுறை, அக்.8 - வீரசோழன் ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதை கண்டித்து உத்திரங்குடி ஊராட்சி சங்கரன்பந்தல் கிராமத்தை சேர்ந்த இளை ஞர்கள், பொதுமக்கள் மயி லாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடி அருகேயுள்ள இலுப்பூர் - சங்கரன்பந்தல் கடை வீதியில் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். 2 மணி நேரத்திற் கும் மேலாக நடந்த போராட்டத்தால் அப்பகுதி யில் பரபரப்பு ஏற்பட்டது. காவிரியின் முக்கிய கிளை ஆறான வீரசோழன் ஆற்றில் இலுப்பூர், சங்கரன் பந்தல் பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்க ளிலிருந்து செப்டிக் டேங் கழிவு உள்ளிட்ட ஆபத்தான பல கழிவுகள் வீரசோழன் ஆற்றில் திறந்து விடப்படு கிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அப்பகு தியை சேர்ந்த மக்கள் ஆற்றில் கழிவுகள் கலப் பதை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி னர். இந்நிலையில், கடந்த 3 நாட்களாக திடீரென கடுமை யான துர்நாற்றம் வீசுவ தோடு, ஆற்று நீர் முழுவதும் கருப்பு நிறத்தில் மாறி மீன்கள், நத்தை உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்கள் செத்து மிதக்கின்றன. இத னால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி யுள்ளனர். சங்கரன்பந்தல், உத்திரங் குடி, ஓலக்குடி, பத்தம், விசலூர், சேந்தமங்கலம், முனிவலங்குடி ஆகிய பகுதி களில் உள்ள நீர்நிலைகளி லும், நிலங்களிலும் ஆற்று நீருடன் கலந்த கழிவுநீர் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள் ளதாக குற்றம் சாட்டியுள்ள னர். உடனடியாக உரிய நடவ டிக்கை எடுத்து கழிவு நீரை முழுமையாக வெளியேற்ற வேண்டுமென வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடை பெற்றது. பின்னர் பொதுப் பணித் துறை (நீர்வளத்துறை) செயற்பொறியாளர் சண்முகம், பொறியாளர்கள் விஜயபாஸ்கர், சீனிவாசன், வட்டாட்சியர் புனிதா, ஊராட்சி ஒன்றிய ஆணையர் கள் விஜயலெட்சுமி, பொறை யார் காவல் ஆய்வாளர் சிங்காரவேலு ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, கழிவுகள் கலந்துள்ளதை பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். உடனடியாக கழிவை வெளியேற்றுவதோடு, கழிவு களை கலப்பவர்கள் மீது கடு மையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.