புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஏழாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழக அரசின் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வழிமுறைகளை பின்பற்றி விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் இரா.கண்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், இளங்கலைப் பட்டதாரிகள் 450 பேருக்கும், முதுகலைப் பட்டதாரிகள் 100 பேருக்கும் என மொத்தம் 550 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.