districts

சேதுபாவாசத்திரம் கிராம வேளாண் முன்னேற்றக் குழு முன்பருவ பயிற்சி

தஞ்சாவூர், ஆக.12-  

       தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் வட்டாரத்தில் உள்ள மருங்கப் பள்ளம், கங்காதரபுரம், முதுகாடு மற்றும் அழகியநாயகிபுரம் பஞ்சாயத் துகளில் கலைஞரின் அனைத்து கிராம  ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், கிராம வேளாண் முன் னேற்றக் குழு முன்பருவ பயிற்சி நடைபெற்றது.

     இதுகுறித்து பட்டுக்கோட்டை, வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் இணை பேராசிரியர் சித்ரா பேசுகை யில், தென்னை நடவு முறை, சொட்டுநீர்  பாசனம், தென்னையில் ஊடுபயிர்கள்,  தென்னையில் கலப்பு பண்ணை அமைத் தல், வறட்சி மேலாண்மை, உர மேம்பாடு  மற்றும் மண் வள பாதுகாப்பு, தென் னையை தாக்கும் பூச்சி மற்றும் நோய் களை கட்டுப்படுத்தும் முறைகளை யும், லாபகரமான பயிர் சாகுபடிக்கும்  மிகுதியான மகசூல் பெறுவதற்கும் தர மான விதைகளும், இடுபொருட் களுமே ஆதாரம்.  

    அதிகளவில் மகசூல் பெறுவதற் கும் பயிர் எண்ணிக்கை குறையாமல் இருப்பதற்கும் பயன்படுத்தப்படும் விதைகள் தரம் உள்ளதாக இருக்க வேண்டும். நெல் விதையை பயன்படுத் துவதால் 10 முதல் 15 சதவீதம் அதிக விளைச்சல் உறுதி செய்யப்படுகிறது. பருவத்திற்கேற்ற விதை ரகங்களை நாம் பயன்படுத்த முன் வரும் போது  ரகத்தின் மரபுத்திறன் முழுமையாக வெளிப்பட்டு அதிக மகசூல் கிடைப் பதற்கு வாய்ப்பாக அமைகிறது. சம்பா  பருவத்திற்கு ஏற்ற நெல் ரகங்களான ஆடுதுறை 51, சி.ஆர்.சப் 1, ஆடுதுறை  54, கோ.ஆர் 50 போன்ற ரகங்களின் தொழில்நுட்பங்களை பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்.

     சேதுபாவாசத்திரம், வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) ஜி.சாந்தி பேசு கையில், வழக்கமான நெல் நாற்றங் கால் அமைத்து 30-35 நாட்கள் கழித்து நடவு பணியை மேற்கொள்வதால் நிலம்  தயாரிப்பு மற்றும் நாற்றங்கால் வளர்ச்சி க்கு அதிக தண்ணீர் செலவு மற்றும் பணச்செலவு அதிகரிப்பதுடன் பயிர் சாகுபடி செய்வதற்கு கால தாமதமும் ஏற்படுகிறது. அதனால் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபடலாம். இதன் மூலம் நாற்றங்கால் அமைக்கும் செலவு இல்லை.          

         நாற்றங்கால் தயாரிப்பு மற்றும்  வளர்ச்சிக்கு தண்ணீர் அதிகம் விரய மாவது தவிர்க்கலாம். நேரம் விரயமும் குறைவு. மேலும் இம்முறையில் ஏற்படும் களை வளர்ச்சியினை கட்டுப் படுத்த களை முளைத்த பின் தெளிக்கும்  களைக்கொல்லிகளை பயன்படுத்தி னால் களைகள் முழுவதும் கட்டுப்பட்டு  விடும்.

       சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங் களில் விதை கிராம திட்டம், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத் தின் மூலம் ஆடுதுறை 51 நெல் ரகம்,  நெல் நுண்ணூட்டம், திரவ உயிர் உரங்கள் 50 சத மானியத்தில் வழங்கப் படுகிறது. எனவே அந்தந்த பகுதி விவ சாயிகள் நேரடியாகவே, தங்களுடைய ஆண்ட்ராய்டு தொலைபேசியில் உள்ள  உழவன் செயலியில் முன்பதிவு செய்திடலாம். அல்லது தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை அணுகியோ, வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் இயங்கும் திட்ட உதவி மையத்தை தொடர்பு கொண்டோ முன்பதிவு செய்திடலாம் என்றார்.