மயிலாடுதுறை, மே 19- மயிலாடுதுறை மாவட் டம் மங்கைநல்லூரில் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், குத்தாலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான கோ.பாரதி மோகன் நினைவு தின பேரவைக் கூட்டம் கட்சியின் குத்தாலம் ஒன்றிய செயலா ளர் சி.விஜயகாந்த் தலைமை யில் வியாழனன்று நடை பெற்றது. இதில், மாவட்டச் செயலா ளர் பி.சீனிவாசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின், எஸ்.துரை ராஜ், டி.சிம்சன், ஏ.ரவிச் சந்திரன், மூத்த உறுப்பின ரும், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவரு மான டி.கணேசன் ஆகியோர் உரையாற்றினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.வெண்ணிலா, மாவட்டக்குழு உறுப்பினர் கள், ஒன்றியச் செயலாளர் கள், ஒன்றியக்குழு உறுப்பி னர்கள், கிளை செயலாளர் கள் மற்றும் முன்னணி ஊழி யர்கள் கலந்து கொண்டனர்.