districts

img

செலக்சன் பள்ளியில் மேல்நிலை முதல் ஆண்டு துவக்க விழா

அறந்தாங்கி, ஜூன் 3 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 2024-2025 ஆம் கல்வி யாண்டின் மேல்நிலை முதல் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் கண்ணையன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் சுரேஷ்குமார் வர வேற்று பேசினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தின ராக திருச்சி காவேரி கலை அறிவியல் கல்லூரி பேரா சிரியை, பட்டிமன்ற பேச்சாளர் டாக்டர் சாத்தமைபிரியா பங்கேற்று வாழ்த்திப் பேசினார். திருச்சி சீக்கர்ஸ் அகாடமி வெங்கடேஷ் மற்றும் புனர்வாசல் டான் போஸ்கோ பள்ளி  முதல்வர் ரைசன் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.