districts

img

மூத்த தோழர் எம்.சிராஜூதீன் காலமானார்

மன்னார்குடி, மார்ச்.3- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விவசாயிகள் சங்கம், மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் முன்னாள் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பி னருமான தோழர் எம்.சிராஜூதீன் காலமா னார். அவருக்கு வயது 62.  நீண்ட காலம் உடல் நலம் குன்றியிருந்த அவர் சிகிச்சை பலனின்றி மன்னார்குடியில் மமஸ்தான் பள்ளித் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.  அன்னாரின் மறைவு செய்தியறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.குமார ராஜா, எம்.கலைமணி, நகர செயலாளர் ஜி. தாயுமானவன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.ரெகுபதி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் டி.சந்திரா, சிஐடியு இணைப்பு சங்க தலைவர்கள் டி.ஜெக தீசன், வீ.கோவிந்தராஜ், ஜி.முத்துக் கிருஷ்ணன், ஜி.மாரிமுத்து இடைக்கமிட்டி உறுப்பினர்கள் ஏ.பி.தனுஷ்கோடி, மகா தேவன், சுப்பிரமணியன், ராமன், அறிவியல் இயக்க செயலாளர் ஆர்.யேசுதாஸ், தமு எகச செயலாளர் தியாக.சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் தோழர் எம்.சிராஜூதீன் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். 

;