தஞ்சாவூர், ஆக.17-
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிபட்டி அருகே நான்குவழிச்சாலையின் பக்கவாட்டுப்பகுதி சரிந்து விழுந்து 55 நாட்களுக்கும் மேலாகி விட்டது. சீரமைப்புப் பணி முடிவடைய இன் னும் ஒரு மாத காலம் ஆகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தஞ்சாவூர்- திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை 15 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. அப்போது பல்வேறு இடங்களில் மேம்பாலம் கட்டப்பட்டதைப் போல, செங்கிப்பட்டி காவல் நிலைய சரகத்துக்கு உட்பட்ட சானூ ரப்பட்டி முதன்மைச் சாலையிலும் மேம் பாலம் அமைக்கப்பட்டது. இப்பகுதி தஞ்சா வூர்-திருச்சிராப்பள்ளி வழித்தடம் மட்டு மல்லாமல், தெற்கே கந்தர்வகோட்டை, வடக்கே பூதலூர், திருக்காட்டுப்பள்ளி வழித்தடங்களுக்கும் முக்கியமான சந்திப் பாக உள்ளது. இந்நிலையில், சானூரப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் பக்கவாட்டு சுவர் ஜூன் 20-ஆம் தேதி காலை ஆறு மணி அளவில் சரிந்து விழுந்தது.
தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை யினர், காவல் துறையினர், வருவாய்த் துறை யினர் உள்ளிட்டோர் நிகழ்விடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். இதையடுத்து, மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டு, அணுகு சாலை வழி யாகத் திருப்பி விடப்பட்டது. ஆனால், திருச்சி ராப்பள்ளி வழித்தடத்தில் இருந்து வரக் கூடிய வாகனங்கள் மேம்பாலத்தின் வடக்குப் பகுதி வழியாக அனுமதிக்கப்பட்டது.
இந்தப் பாலத்தை உடனடியாக சீர மைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சென்னை ஐஐடியில் இருந்து வல்லுநர்கள் வந்து ஆய்வு செய்த பிறகு அவர்களுடைய ஆலோசனைகளின் அடிப்படையில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, விரைவில் போக்கு வரத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்திருந்த னர். ஒரு மாதத்தில் இந்தப் பாலம் சீர மைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், திருச்சிராப்பள்ளி யில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் பேராசிரியர்களை உள்ளடக்கிய மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது, சேதமடைந்த பகுதியை ஆய்வு செய்து, தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை பரிந்து ரைத்தது. அறிக்கையையும் சமர்ப்பித்து விட்டது.
கிட்டத்தட்ட 55 நாட்களுக்குப் பின் இன்னும் ஒரு மாதத்தில் பழுது நீக்கும் பணி தொடங்கும் என்கிறார் அதிகாரியொருவர். அதற்காக பணிகள் தொடங்கவில்லை என்று கூறிவிட முடியாது. “பணி தொடங்கவில்லை என்று தவறான கருத்து நிலவுகிறது. பக்கவாட்டில் இடிந்துவிழுந்த பகுதிகளை மீண்டும் அச்சில் வார்க்கும் பணிகள் தொடங்கியுள்ளன. வார்ப்புப் பணிகள் முடிவடைந்தவுடன் சிமெண்ட் அச்சுகள் பாலத்தின் பக்கவாட்டில் பொருத்தப்படும். பக்கவாட்டு பகுதி சரிந்து விழுந்தாலும் மண்ணின் தன்மை வலுவாக உள்ளது. வார்ப்புகளை பொருத்தும் பணிகள் முடிவடைந்ததும் 15 முதல் 20 நாட்களில் பணிகள் முழுமையடையும் என்கின்றனர்.