கரூர், அக்.28 - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் 31 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாவட்ட மாநாடு மதுரை சாலையில் உள்ள ஜெய ராம் கல்லூரியில் நடைபெற்றது. ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக் கான சுற்றுச்சூழல் அமைப்பை புரிந்து கொள்ளுதல் என்ற கருப்பொருள் அடிப்ப டையில் மாணவ, மாணவிகள் அறிவியல் ஆய்வுகளை இந்த மாநாட்டில் சமர்ப்பித்த னர். ஒரு குழுவிற்கு இரண்டு மாணவர்கள் ஆய்வுகளை மேற்கொள்வார்கள். அவர் களுக்கு வழிகாட்டியாக ஒரு ஆசிரியர் செயல்படுவார். அறிவியல் மாநாட்டிற்கு கல்லூரியின் தாளாளர் ராமசாமி தலைமை வகித்தார். மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் ஜெ. ஜெயராஜ் வரவேற்றார். கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் லெ.சுமதி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். இஸ்ரோ விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான முனைவர் பெ.சசி குமார் மாணவர்களிடையே கலந்துரை யாடினார். அறிவியல் இயக்கத்தின் கரூர் மாவட்டச் செயலாளர் ஐ.ஜான்பாஷா, மாவட்ட கல்வி அலுவலர் இரா.மணிவண்ணன், பள்ளப் பட்டி கிரசன்ட் பள்ளி முதல்வர் என்.சாகுல் ஹமீது, பரணி வித்யாலயா பள்ளி முதல்வர் சுதாதேவி ஆகியோர் பேசினார். அறிவி யல் இயக்க மாநிலச் செயலாளர் மு.தியாக ராஜன் மாநாட்டை நிறைவு செய்து பேசி னார். மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பா ளர் ஆரோக்கிய பிரேம்குமார் நன்றி கூறி னார். டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஏழு ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது. கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என 45 பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட னர். பள்ளியளவில் 2300-க்கும் அதிக மான அறிவியல் ஆய்வுகள் பதிவு செய்யப் பட்டன. சமர்ப்பித்த அறிவியல் ஆய்வு களை ஆசிரியர்கள் மதிப்பீடு செய்து, 35 அறிவியல் ஆய்வுகளை தேர்ந்தெடுத்த னர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், நவம்பர் 4 அன்று மேற்கு மண்டலம் சார்பில் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் மண்டல அளவிலான அறிவியல் மாநாட்டில் பங்கேற்று தங்களது அறிவியல் ஆய்வு களை சமர்ப்பிப்பர். இதில் தேர்வாகும் மாணவ, மாணவிகள் (அவர்களின் ஆய்வு கட்டுரைகள் உட்பட) மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் தேசிய குழந்தை கள் அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்வர்.