districts

img

சேகுவாரா பிறந்தநாள் மரக்கன்றுகள் வழங்கல்

புதுக்கோட்டை, ஜூன் 15-  

     சேகுவாராவின் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் புதன்கிழமையன்று மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

   புரட்சியாளர் சேகுவராவின் பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில்  வைக்கப்பட்டிருந்த அவரது புகைப்படத்திற்கு வாலிபர்  சங்கத்தின் சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப் பட்டது.  மேலும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில்  பொதுமக்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

   வாலிபர் சங்கத்தின் நகரச் செயலாளர் ஜெகன் தலை மையில் நடைபெற்ற நிகழ்வில், துணை தலைவர் நித்  திஸ்குமார், நகரக் குழு உறுப்பினர்கள் தீபக், உதயநிதி,  சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.நாகராஜன்,  நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன், நகரக்குழு உறுப்  பினர் எம்.ஏ.ரகுமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.