districts

திருச்சி முக்கிய செய்திகள்

கண் பரிசோதனை முகாம்

பாபநாசம், மார்ச் 16 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வாசன் கண் மருத்துவமனை, பாப நாசம் ஓய்வு பெற்ற அலு வலர் சங்கம் இணைந்து இலவச கண் பரிசோதனை  முகாமை நடத்தின. பாப நாசம் ஓய்வு பெற்ற அலு வலர் சங்க கட்டிடத்தில் நடந்த முகாமில், வாசன் கண் மருத்துவமனை பரி சோதகர்கள் 50-க்கும் மேற்பட்டோருக்கு பரி சோதனை மேற்கொண்ட னர். இதில் கண்புரை முற்றிய நிலையில் இருந்த 13 பேர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும், 11  பேர் கண்ணாடி அணிய வும், 24 பேர் மேல் சிகிச் சைக்கும் பரிந்துரைக்கப்பட் டனர். ஓய்வு அலுவலர் சங்கத் தலைவர் சுப்பு தங்கராசு, செயலர் துரை சாமி, பொருளாளர் துரை ராஜ், துணைத் தலைவர் ஜீவரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாஜகவை தோற்கடிக்க ஆட்டோ தொழிலாளர்கள் முடிவு
அரியலூர், மார்ச் 16 - திருமானூரில் ஆட்டோ  தொழிலாளர் சங்க கூட்டம்  கிளைத் தலைவர் அலா வுதீன் தலைமையில் நடை பெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளர் துரைசாமி, துணைத் தலைவர் சிற்றம் பலம் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். சங்க உறுப்பி னர்கள் பலர் கலந்து கொண்டனர். நாடாளு மன்றத் தேர்தலில் பாஜ கவை தோற்கடிக்க வேண் டும் என தீர்மானிக்கப் பட்டது.

பாலிடெக்னிக்  கல்லூரியில் ஆண்டு விழா

அரியலூர், மார்ச் 16 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் க.சொ. க பாலிடெக்னிக் கல்லூரி யில், 12 ஆம் ஆண்டு விழா  கல்லூரி துணைத் தலை வர் மருத்துவர் மாலதி கண்ணன் தலைமையில் நடைபெற்றது,  முன்னதாக கல்லூரி முதல்வர் சண்முகநாதன் வரவேற்றார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு கல்லூரியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான க.சொ. க.கண்ணன் பரிசுகள்  வழங்கி சிறப்புரையாற்றி னார். முதலாம் ஆண்டு  துறைத் தலைவர் கௌத மன் ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரி பேரா சிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண் டனர். தமிழ்த்துறை பேரா சிரியர் ரவி நன்றி கூறி னார்.

பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கல்

அரியலூர், மார்ச் 16 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் அரியலூர் மாவட்ட  நிர்வாகம் சார்பில், ஜெயங் கொண்டம் பகுதியில் 35  மாற்றுத்திறனாளி களுக்கு  ரூ.33.60 லட்சம் மதிப்பீட் டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை, ஜெயங் கொண்டம் க.சொ.க. கண்ணன் எம்எல்ஏ வழங் கினார். மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நலத்துறை அலு வலர் ரவிச்சந்திரன், மாற்றுத் திறனாளிகள் முடநீக்கு வல்லுநர் ஜெயராமன், ஜெயங்கொண்டம் நக ராட்சித் தலைவர் சுமதி சிவ குமார் மற்றும் அரசு அலு வலர்கள், மாற்றுத்திற னாளிகள் கலந்து கொண்ட னர்.

புதுகையில் ‘வனத்தீ மேலாண்மை’ விழிப்புணர்வு கூட்டம்

புதுக்கோட்டை, மார்ச் 16 - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், வனத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான ‘வனத்தீ மேலாண்மை’ குறித்த கூட்டம், மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.  அப்போது ஆட்சியர் பேசுகையில், “வனத்தீ தடுப்பிற்கான, விழிப்புணர்வு பிரச்சாரங்கள், தீ பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் அமலாக்கம், காய்ந்த தாவரங்களை அளித்தல், வன மேலாண்மை நடைமுறைகள், காட்டுத் தீயை ஆரம்ப நிலையில் கண்டறிதல், காட்டுத் தீயினை எதிர்கொள்வதற்கு பொதுமக்களை தயார் செய்தல், தீயணைக்கும் நடவடிக்கைகள், ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி, பொதுமக்களின் பங்களிப்பு, தொடர் கண்காணிப்பு உள்ளிட்டவை மூலம் வனத்தீ தடுப்பு விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது.  புதுக்கோட்டை மாவட்டத்தில், பொதுவாக வாழக்கூடிய வன உயிரினங்கள் காட்டெருமை, மான், குரங்கு, மயில், மலைபாம்பு, முயல், உடும்பு, கீரிப்பிள்ளை, நட்சத்திர ஆமை, எறும்புதின்னி, தேவாங்கு போன்றவை ஆகும். வனத்தீ ஏற்படும் போது இவற்றின் வாழ்விடம் மிகவும் பாதிக்கப்படுகிறது. எனவே வனத்தீ ஏற்படுவதற்கான வாய்ப்புகளை உருவாக்காத வகையில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” என்றார். இக்கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்தியகீர்த்தி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மானிய விலையில் விவசாயக் கருவிகள்

கரூர், மார்ச் 15-  கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட  மாவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் கீதா செந்தில்மோகன், தனது ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயி கள், விவசாயத் தொழிலாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளார்.  அதில், “கரூர் மாவட்டம், கடவூர் வட்டத்திற்குட்பட்ட தரகம் பட்டியில் செயல்பட்டு வரும் வேளாண் விரிவாக்க மையத்தில்  வேளாண் பண்ணை கருவிகள் ஒரு மண்வெட்டி, ஒரு கடப்பாரை,  ஒரு காரைசட்டி, ஒரு களைகொத்து மற்றும் 2 கதிர் அருவாள்  ஆகிய பொருட்களின் மொத்த விலை ரூ.3,066 ஆகும். விவசா யிகளுக்காக 50 சதவீதம் மானியத்தில், ரூ.1,533 செலுத்திட வேண்டும். மேலும் இச்சலுகையை பெறுவதற்கு தங்களின் ஆதார், ரேசன் அட்டை, வங்கி புத்தக நகல், நிலத்தின் சிட்டா மற்றும்  பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை கொடுத்து விவ சாயிகள் பயனடைய வேண்டும்” என கூறியுள்ளார்.

நுகர்வோர்  உரிமை தினம்

அரியலூர், மார்ச் 16- அரியலூரை அடுத்த சிறுவளூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் நுகர் வோர் பாதுகாப்பு மன்றம்  சார்பில் உலக உரிமை கள் தினம் வெள்ளிக் கிழமை கொண்டாடப்பட் டது. நிகழ்ச்சிக்கு மன்ற பொறுப்பாளரும் ஆசிரி யருமான செந்தில்கும ரன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரி யர் சின்னதுரை உரை யாற்றினார்.

போதைப் பொருட்கள் பறிமுதல்

போதைப் பொருட்கள் பறிமுதல் அரியலூர், மார்ச் 16 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் அர சால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை கஞ்சா மற்றும்  சட்ட விரோதமாக மது விற்பனை, கள் விற்பனை போன்ற  குற்ற செயல்களை தடுக்க, போலீசார் தீவிர கண்காணிப் பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜெயங்கொண்டம் அருகே விருத்தாச்சலம்  ரோடு மகிமைபுரம் பகுதியில் சிலர் சட்டவிரோதமாக குட்கா  மற்றும் போதைப் பொருட்களை காரில் பதுக்கி வைத்து, கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத் தது.  இதையடுத்து ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் ராமராஜன் தலைமையிலான போலீசார்,  அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமாக  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்களை சோதனைக்கு உட்படுத்தியதில், அரசால் தடை  செய்யப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான, 180 கிலோ ஹான்ஸ்  மற்றும் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பதுக்கி  கடத்தி வந்தது தெரிந்தது.  இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய 2 கார்களையும், ரூ.1.15. லட்சம்  ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர்.   மேலும், சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜ துரை (30) மற்றும் அரியலூர் மாவட்டம் பாப்பாக்குடி மெயின்  ரோட்டுத் தெருவைச் சேர்ந்த குமரன் (48) ஆகிய இருவரை யும் போலீசார் கைது செய்தனர்.

கோரிக்கை ஏற்பு ஆக்கிரமிப்பில் இருந்த பட்டத்துகன்னி வாய்க்கால் சீரமைப்பு

கோரிக்கை ஏற்பு ஆக்கிரமிப்பில் இருந்த பட்டத்துகன்னி வாய்க்கால் சீரமைப்பு பாபநாசம், மார்ச் 16 - தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே திருவைக்கா வூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேலமாஞ்சேரி கிராமத்தில், பட்டத்துகன்னி வாய்க்கால் சுமார் 12 அடி அகலம், 2 கிலோ மீட்டர் நீளம் உடையது. இந்த பட்டத்துகன்னி வாய்க்கால் மூலம் சுமார் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் 35 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது.  இந்நிலையில் பட்டத்து கன்னி வாய்க்காலை சிலர் ஆக்கிரமித்து பாசன வசதியை தடுத்தனர். இதனால் பாசன  வாய்க்கால் இருந்த இடம் தெரியாமல் போனது. இதில் உரிய  நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், பொதுப் பணித்துறை நீர்வளத் துறையின் காவிரி வடிநில கோட்டம், ஆற்றுப் பாசன உபகோட்ட உதவி செயற்பொறி யாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து உதவி செயற்பொறியாளர் மற்றும்  நீர்வளத்துறை அதிகாரிகள் துரிதமாகச் செயல்பட்டு, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வாய்க்காலை, வருவாய்த்துறை மூலம் அளந்து எல்லைகளை கண்டறிந்து, பாசன வாய்க்காலை  வெட்டி நீர் வழியை மேம்படுத்தினர்.  இந்த பட்டத்துகன்னி வாய்க்கால் சீரமைப்பை, தமிழ்நாடு  விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சாமு.தர்மராஜன் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர்.

தேர்தல் பத்திர விவகாரம்: பாஜகவுக்கு தக்க பாடம் புகட்டப்படும்  அமைச்சர் அன்பில் மகேஸ் கருத்து

தஞ்சாவூர், மார்ச் 16 -  தேர்தல் நன்கொடை பத்திர விவகாரத்தில் பாஜக வுக்கு வரும் தேர்தலில் தக்க  பாடம் புகட்டப்படும் என  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கருத்து தெரிவித்தார். தஞ்சாவூரில், சனிக் கிழமை பள்ளிக் கல்வித்துறை  அமைச்சர் அன்பில் மகேஸ்  பொய்யாமொழி செய்தியா ளர்களிடம் கூறியதாவது: பி.எம்.சி. திட்டத்துக்கு ஒன்றிய அரசு ஆண்டுக்கு ரூ.3,500 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால்  தற்போது மூன்று மற்றும்  நான்காவது தவணை தொகை ஒன்றிய அரசிட மிருந்து தமிழகத்துக்கு வர வில்லை. இதுகுறித்து கேட்ட  போது, நாங்கள் கூறிய அம்சங்களை எல்லாம் கல்வித் திட்டத்தில் சேர்க்க  வேண்டும் எனக் கூறினார் கள். புதிய கல்விக் கொள் கையை நாங்கள் தொ டர்ந்து எதிர்க்கிறோம். குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டிப்பாக அமல் படுத்த வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கூறி வருவது, மாநில உரி மையை பறிப்பதாக உள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து சமுதாயத்தின ரும் ஒற்றுமையாக உள்ள னர். குடியுரிமை திருத்தச்  சட்டத்தை கண்டிப்பாக தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என முதல மைச்சர் கூறியுள்ளார். தேர்தல்  பத்திரம் விவகாரத்தில் பாஜகவுக்கு இந்த நாடாளு மன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும். இவ்வாறு அவர் கூறி னார்.

பேராவூரணியில் அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்ட  அடிக்கல் நாட்டு விழா 

தஞ்சாவூர், மார்ச் 16-  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி காமராஜர் அரசு  மருத்துவமனைக்கு, பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார  கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி, புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், மேற்பனைக்காடு, அணைவயல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 700-க்கும்  மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று  வருகின்றனர்.  தற்போதுள்ள அரசு மருத்துவமனை கட்டிடம் 1971 ஆம்  ஆண்டு திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு, 1977 இல்  திறந்து வைக்கப்பட்டது. இந்த கட்டிடம் கட்டி முடிக்கப் பட்டு சுமார் 48 ஆண்டுகள் ஆன நிலையில், பேராவூரணி  அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டித் தரப்ப டும். நவீன வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என கடத்த  சட்டமன்றத் தேர்தலின் போது பேராவூரணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் உறுதி யளித்தார். மேலும் இதுகுறித்து சட்டமன்றத்திலும் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் பரிந்துரையின்படி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேராவூரணி அரசு மருத்துவமனையை மேம்படுத்த ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். இந்த  மருத்துவமனை தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என நவீன வசதிகளுடன் கட்டப்பட உள்ளன.  இதையடுத்து, சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு பேராவூரணி அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய  கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா சட்டப் பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர்,  தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

கணவரை இழந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பாஸ்டர்

மயிலாடுதுறை, மார்ச் 16 - மயிலாடுதுறை அருகேயுள்ள திருவாளப்புத்தூர் கிரா மத்தில் வசிக்கும் கணவரை இழந்த பெண் ஒருவரை,  அதே பகுதியில் கிறிஸ்தவ சபை நடத்தி வருகிற பாஸ்டர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக மயிலாடு துறை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  மயிலாடுதுறை அருகேயுள்ள புத்தாகரம், திருவாள புத்தூர் மேலத்தெருவில் ஜிஇஆர்எம் என்ற பெயரில் பெந்தேகோஸ்தே சபை நடத்தி வருகிறார் பிலிப் என்கிற  விஜயேந்திரன். இவர், அதே பகுதியில் வசிக்கும் கண வரை இழந்த பெண் ஒருவரிடம், காலில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு எண்ணெய் ஜெபித்து தருவதாகக் கூறி சபையை ஒட்டியுள்ள வீட்டிற்கு அழைத்துள்ளார். இவரது வார்த்தையை நம்பி அப்பெண் வந்தவுடன்,  வீட்டின் கதவை மூடி தாக்கி மிரட்டி வலுக்கட்டாயமாக பாலி யல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். மேலும், அப்பெண்ணின் கழுத்தில் துணியை சுற்றி, “யாரிடமாவது  கூறினால் கொன்று விடுவேன்” என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான அந்தப் பெண், அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கத்தினரை அணுகியுள்ளார்.  இந்நிலையில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.வெண்ணிலா, மாவட்டத் தலைவர் சரிதா, பொருளா ளர்(பொ) ஜி.கலைச்செல்வி, மாவட்ட துணைத் தலை வர் டி.ஆர்.ராணி, மாவட்டக்குழு உறுப்பினர் உஷா ராணி,  மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் டி.ஜி.ரவி,  மாவட்டக்குழு உறுப்பினர் சி.மேகநாதன் உள்ளிட்ட தலை வர்கள் மயிலாடுதுறை மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு புகார் அளித்த னர்.  இதனிடையே வெள்ளியன்று இரவு பாலியல் வன்கொ டுமையில் ஈடுபட்ட பாஸ்டர் மீது  காவல்துறையினர் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர்.

வியாபாரியிடம் வெள்ளி நகைகள் கொள்ளையடித்த 5 பேர் கைது

தஞ்சாவூர், மார்ச் 16- வெள்ளி வியாபாரியிடம் 7 கிலோ வெள்ளி நகைகள்  இருந்த பையைக் கொள்ளையடித்த 5 பேரை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் கர்தாராம் (28).  இவர் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே யுள்ள நாணயக்காரச் செட்டித் தெருவில் சில ஆண்டு களுக்கு முன்பு குடியேறி வெள்ளி நகைகளை மொத்த மாக வாங்கி தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களி லுள்ள கடைகளில் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், வெள்ளிக் கொலுசு, மெட்டி உள்பட 12 கிலோ வெள்ளி நகைகள் நிரப்பப்பட்ட பையை மார்ச் 8  அன்று எடுத்துக் கொண்டு புதுக்கோட்டை மாவட்டங்களி லுள்ள நகைக் கடைகளில் 5 கிலோ விற்பனை செய்து விட்டு, மீண்டும் இரவு தஞ்சாவூருக்கு வந்தார். பின்னர், பழைய பேருந்து நிலையத்திலிருந்து வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் தன்னுடன் தங்கியுள்ள  ஆசுராமுடன் சென்று கொண்டிருந்தார். தெற்கு அலங்கம்  திருவள்ளுவர் வணிக வளாகம் அருகே சென்றபோது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் இவர் களை வழிமறித்து, இருவரது முகத்திலும் மிளகாய் பொடி களைத் தூவியும், அரிவாளைக் காட்டி மிரட்டியும் 7  கிலோ வெள்ளி நகைகள் கொண்ட பையை கொள்ளை யடித்துச் சென்றனர். இதுகுறித்து மேற்கு காவல் நிலையத்தினர் வழக்குப்  பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. நிகழ்விடத்திலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும், கைப்பேசி சமிக்ஞைகளையும் அடிப்படையாகக் கொண்டு  திருச்சி, கும்பகோணத்தில் தனிப்படையினர் விசாரணை  நடத்தினர்.  இதில், இச்சம்பவத்தில் தொடர்புடைய திருச்சி செம் பட்டைச் சேர்ந்த மணிகண்டன் (27), கும்பகோணம் பிரம்மன் கோவில் தெரு லயன்கரையைச் சேர்ந்த சரவணன்  (28), 16 வயது சிறுவன், கும்பகோணம் லயன்கரை ரங்கன்  தெருவைச் சேர்ந்த தீனா (21), கும்பகோணம் அருகே நாச்சி யார்கோவில் திருநரையூரைச் சேர்ந்த கரண் (26) ஆகிய 5 பேரை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.  இவர்களிடமிருந்து ஐந்தரை கிலோ வெள்ளி நகை கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சிலரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

லஞ்சத்தை தடுக்க வேண்டிய வருமானவரி, அமலாக்கத்துறையில் லஞ்சம் ஊடுருவி உள்ளது

உயர்நீதிமன்றம் அதிருப்தி

மதுரை, மார்ச் 16 - சட்டவிரோத செயல்க ளை, லஞ்சம் பெறுவதையும் தடுக்க வேண்டிய வரு மானவரித்துறை, அம லாக்கத்துறை போன்ற துறைகளில் லஞ்சம் ஊடு ருவி உள்ளது என்பதை சகித்துக்கொள்ள முடியாது.  உயர்நீதிமன்ற நீதிபதி தெரி வித்துள்ளார். அமலாக்கத் துறை அதிகாரி அங்கித்தி வாரியின் ஜாமீன் மனு 2ஆம் முறையாக தள்ளுபடி செய்து  உத்தரவிட்டார். திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் மிரட்டி லஞ்சம் பெற்ற வழக்கில் அம லாக்கத்துறை துணை இயக்குனர் அங்கித்திவாரி தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 2 ஆம் முறையாக மனு தாக்கல்செய்திருந்தார். இந்த மனு மீண்டும் வெள்ளியன்று நீதிபதி தண்டபாணி முன் விசார ணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிக்குமார், அமலாக் கத்துறை அதிகாரி அங்கித் திவாரி வழக்கு விசார ணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித் துள்ளது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப் பத்திரிக்கை தயார் நிலை யில் உள்ளது. எனவே குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய வில்லை எனக்கூறி ஜாமீன் கோர முடியாது. எனவே அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் வழக்கு தீவிர மானது. அதிகாரிகள் லஞ்சம் கையூட்டு பெறும் செயல்கள் அதிகரித்திருப்பது தேசத் தின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. சட்டவிரோத செயல்களை, லஞ்சம் பெறுவதையும் தடுக்க வேண்டிய வருமான வரித்துறை,  அமலாக்கத் துறை போன்ற துறைகளில் லஞ்சம் ஊடுருவி உள்ளது என்பதை சகித்துக்கொள்ள முடியாது.  தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய தயாராக உள்ளது. உச்சநீதிமன்றம் வழக்கிற்கு இடைக்கால தடை விதித்துள்ளதால், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே தன் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய வில்லை எனக்கூறி மனுதாரர் ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது எனக்கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தேர்தல் நடத்தை விதிகள் அமல் மக்கள் பிரதிநிதிகளின் அலுவலகங்களுக்கு சீல்

அரியலூர், மார்ச் 16 - தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது.  இந்நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. இதையடுத்து ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பூட்டி வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.  இதேபோன்று நகராட்சி, ஒன்றிய, பேரூர் கழக தலைவர்கள் அறைகளுக்கும் சீல் வைக்கும் பணி, அரசியல் விளம்பர பேனர்கள், சுவரொட்டிகளை அகற்றும் பணிகளிலும் வருவாய்த் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.