districts

img

பாபநாசம் வட்டார வள மையத்தில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி

பாபநாசம் வட்டார வள மையத்தில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடந்தது.  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டாரத்திற்குட்பட்ட 40 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் நோக்கில், நடந்த கண்காட்சியை பாபநாசம் வட்டார வளமைய மேற்பார்வையாளர்(பொ) முருகன் தொடங்கி வைத்தார். இதில் மாணவர்கள் அக்ரி, ஆர்கிடெக்ட், ரோபோட்டிகல், மருத்துவம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட தலைப்புகளில் அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர். பாபநாசம் வட்டாரத்தைச் சேர்ந்த 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்றனர்.