கரூர், பிப்.4 - கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் நங்க வரத்தில் செயல்பட்டு வரும் ஸ்ரீகாஞ்சி சங்கரா வித்யாலயா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி யில் முதலாம் ஆண்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. அறிவியல் கண்காட்சி துவக்க விழா விற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பா.கவிதா தலைமை வகித்தார். ஓய்வுபெற்ற காவல் துணை கண்காணிப்பாளர் எஸ்.வெங்கட்ராமன் கண்காட்சியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். பள்ளியின் செயலாளர் பி.சங்கரநாராயணன் வர வேற்று பேசினார். விவசாயிகள் சங்க குளித் தலை ஒன்றியச் செயலாளர் டி.இளங்கோ வன், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாண வர்களின் கண்காட்சியை பார்வையிட்டு சிறப்பான அறிவியல் கண்டுபிடிப்புகளை யும், தொழில் நுட்பங்களையும் காட்சிப் படுத்திய மாணவர்களை பாராட்டினர்.