districts

img

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கல்

மயிலாடுதுறை, ஜூன் 10- தமிழகம் முழுவதும் கோடை விடு முறைக்குப் பிறகு, அரசுப் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.  பள்ளிகள் திறந்த நாளிலேயே விலை யில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் அரசின்  சலுகைகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இதன்படி  டெல்டா மாவட்ட அரசுப் பள்ளிகளில் திங்க ளன்று மாணவர்களுக்கு விலையில்லாப் பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட டபீர்தெருவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில், பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா பாட நூல்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை மாவட்ட ஆட்சி யர் ஏ.பி.மகாபாரதி வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு, மயிலாடுதுறை சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார், மயி லாடுதுறை நகர்மன்ற தலைவர் என்.செல்வ ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட கிடங்கல் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலை யில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் குறிப்பேடு கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை  ஆசிரியர் ஷீலா தலைமை வகித்தார். பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும்  மாணவ மாணவிகளுக்கு பாடப் புத்த கங்கள், குறிப்பேடுகள் மற்றும் இனிப்புகள்,  மரக்கன்றுகள் வழங்கி பேசினார்.

தஞ்சாவூர்

பேராவூரணி ஊராட்சி ஒன்றிய வடகிழக்கு தொடக்கப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி  தலைமை ஆசிரியர் சித்ராதேவி தலைமை யில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக வட்டாரக் கல்வி அலுவலர் கலா ராணி மாணவ-மாணவிகளுக்கு பாட நூல்களை வழங்கினார்.  நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கௌதமன், ஆசிரியர்கள் ரேணுகாதேவி, ஹாஜாமைதீன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 140 மாணவ -மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. 

அரசுப் பெண்கள் பள்ளி

பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆதார் அட்டை திருத்த முகாம் மற்றும் 6 ஆம் வகுப்பு முதல்  12 ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவி களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரா வூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா. அசோக்குமார் தலைமை வகித்து பாடப் புத்த கங்களை வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்டக் கல்வி அலுவலர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.  தாராசுரம் கும்பகோணம் மாநகரத்திற்குட்பட்ட தாராசுரம் வை.கோவிந்தசாமி நினைவு அரசு மேல்நிலைப் பள்ளியில், பொதுத்  தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் களுக்கு பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பி னர்கள் ஆசிரியர்கள் சார்பாக பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. இதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசுப்  பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப்  பெற்ற மாணவர்கள் மற்றும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டுத் தேர்வில் ஒவ்வொரு  வகுப்பிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் இளங்கோவன், கும்பகோணம் மாநகராட்சி மாமன்ற உறுப் பினர் ஆ.செல்வம் ஆகியோர் மாணவர்களை  பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கினர். தொடர்ந்து மாணவர்களுக்கு ஆதார்  பதிவு மற்றும் புதுப்பித்தல் முகாம் நடை பெற்றது.

பாபநாசம்

பாபநாசம் அரசினர் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான  சிறப்பு ஆதார் பதிவு முகாம் நடந்தது. முகாமை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹி ருல்லா முகாமை துவக்கி வைத்தார். பள்ளித்  தலைமையாசிரியர் நீலா தேவி மற்றும் திமுக பிரமுகர்கள் பங்கேற்றனர். இதே போன்று ரெகுநாதபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் வழங்கப்படும் காலை உணவை பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா ஆய்வு செய்தார். பின்பு, 46 மாணவர்களுக்கு தமிழக அரசின் புத்தகம், நோட்டுகளை வழங்கினார். இதில்  பள்ளி தலைமையாசிரியர் பரிமளா மற்றும் ஆசிரியை, மாணவர்கள் பங்கேற்றனர். 

அரியலூர்

அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளும் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. இதையொட்டி பெற்றோர்கள்  தங்களது பிள்ளைகளை ஆர்வமுடன் பள்ளிக்கு அழைத்து வந்தனர். பள்ளிக்கு  வந்த மாணவ, மாணவிகளை ஆசிரி யர்கள் மலர்கள் மற்றும் இனிப்புகளை வழங்கி வரவேற்றனர். அரசு மற்றும் அரசு  உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவி களுக்கு முதல் நாளிலேயே விலையில்லா பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் வழங்கப் பட்டன.  ஆதார் அட்டை,  புகைப்படம் எடுக்கும் பணி  அரியலூர் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளிலேயே மாணவர்களுக்காக ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் எடுக்கும்  பணிகள் திங்கள்கிழமை தொடக்கி வைக்கப் பட்டன. இதற்காக அரியலூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடை பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், முகாமை தொடக்கி வைத்து, மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்கினார். மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, சட்டப் பேரவை உறுப்பி னர் கு.சின்னப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  நாகப்பட்டினம் நாகப்பட்டினம் பள்ளிகளில் புத்தகம் மற்றும் குறிப்பேடு வழங்குதல், ஆதார் அட்டை புதுப்பித்தல், பள்ளிகளில் சிறு சேமிப்பு கணக்கு துவங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என்.கௌதமன், மாவட்ட முதன்மை கல்வி  அலுவலர் எம்.கே.சி.சுபாஷினி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.