districts

img

உலக மரபு வார விழா ‘வரலாற்று உலா’ சென்ற பள்ளி மாணவர்கள்

கும்பகோணம், நவ.26 - உலக மரபு வார விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர்  மாவட்டம் கும்பகோணம் ஆய்வு சங்கம் சார்பில் பள்ளி  மாணவர்களுக்கு ‘வரலாற்று உலா’ நிகழ்வு கீழ்க்கோட் டம் நாகேஸ்வரர் கோவிலில் நடைபெற்றது.  இந்நிகழ்வு குறித்து சங்கத்தின் நிறுவனரும், வரலாற்று ஆய்வாளருமான கும்பகோணம் ஆ.கோபி நாத் கூறுகையில், “வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடக் கலை மற்றும் சின்னங்கள் குறித்து விளக்கவும், அங்குள்ள  கல்வெட்டுகளை மாணவர்களுக்கு வாசிக்கவும் கற்றுக் கொடுக்கப்பட்டது. புராதன கலைகளைப் போற்றி பாது காக்கும் வகையில் ஆண்டுதோறும் இந்த மரபு விழாவை எங்கள் அமைப்பு கொண்டாடுகிறது” என்றார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.  நிகழ்ச்சி நிறைவில், மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, சரியாக பதிலளித்த மாணவர்களுக்கு புத்தகம் பரிசளிக்கப்பட்டது.