பாபநாசம், ஏப்.18- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. பாபநாசம் பேரூராட்சி கவுன்சி லர்கள் கெஜலட்சுமி, பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்த னர். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் முத்துலட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் மணியரசன் தலைமை வகிதார். அப்போது அவர் பேசுகையில், “ இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து விடுபடாமல் பள்ளியில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்”. பள்ளி மேலாண்மைக் குழு ஆசிரியர் பிரதிநிதி செல்வக்குமார், இல்லம் தேடிக் கல்விப் பொறுப்பாளர் கார்த்திகா உட்பட பலர் கலந்துகொண்டனர்.