districts

பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

திருச்சிராப்பள்ளி, ஜன.6 - ஒன்றிய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப் படிப்பு கல்வி  உதவித் தொகைத் திட்டத்தின்கீழ், அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத் தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்க தமிழக அரசு உத்தேசித் துள்ளது.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற பெற்றோ ரின் உச்சகட்ட ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத் திற்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.4000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும். இதில் பயன்பெற 9 மற்றும் 10 ஆம் வகுப் பில் பயிலும் மாணவிகள் தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளில் அல்லது அஞ்சல் வங்கி களில் தமது பெயரில் வங்கிக்கணக்கு துவங்கி அதனை தமது ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். மேற்படி ஆதார் எண்  மற்றும் வங்கி விபரங்களை தமது வரு மானச் சான்று மற்றும் சாதிச்சான்று நகல்களு டன் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரி யர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

அரசுப்  பள்ளித் தலைமையாசிரியர்கள், மாணவியர் களது விபரங்களை எமிஸ் இணையதளத்தில்  பதிவேற்றம் செய்ய வேண்டும்.  திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து தகுதி வாய்ந்த மாணவியர்களும் உரிய காலத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்  தெரிவித்துள்ளார்.