தமிழக அரசின் சார்பில் காவல் துறையினரின் குழந்தைகளுக்கு தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2020-2021 ஆம் ஆண்டிற்கான சிறப்பு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதனன்று நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.விஜயகுமார், திருவாரூர் மாவட்டத்தில் 5 காவல் ஆளிநர்கள்-அமைச்சு பணியாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.1,07,050 கல்வி ஊக்கத்தொகையை வழங்கினார்.