தஞ்சாவூர், டிச.18 - உள்நாட்டு மீன் உற்பத் தியை மேலும் அதிக ரிக்கவும், மீன் வளர்ப்போரை ஊக்குவிக்கும் விதமாகவும் பல திட்டங்கள் செயல் படுத்தப்பட்டுள்ளன. இத்திட் டத்தில் சேர்ந்து பயன்பெற, டிச.25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன் ராஜ் ஆலிவர் தெரிவிக்கை யில், உள்நாட்டு மீன் உற்பத் தியில் மாநில அளவில் தஞ்சை மாவட்டம் முதல் இடத்தில் வகிக்கிறது. உள்நாட்டு மீன் உற்பத்தியை மேலும் அதிகரிக்கவும், மீன் வளர்ப்போரை ஊக்கு விக்கும் விதமாகவும் பிரத மர் மீன்வள மேம்பாட்டு திட்ட த்தின் கீழ் கீழ்காணும் திட்டங்கள் செயல்படுத்தப் படவுள்ளன. இதன்படி, புதிய நன்னீர் மீன்குஞ்சு பொரிப்பகம் அமைக்கும் திட்டத்தில் பொதுப்பிரிவு பயனாளி களுக்கு மட்டும் ஒரு அலகு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த அலகு ஒன்றிற்கு ஒப்பளிக்கப்பட்ட தொகை ரூ.25 லட்சத்தில் - 40 விழுக்காடு மானியத் தொகை யாக ரூ.10 லட்சம் வழங்கப் படும். மேலும் புதிய மீன் குஞ்சு வளர்ப்பு குளங்கள் அமைத் தல் திட்டத்திற்கு 3 ஹெக் டேர் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. ஹெக்டேர் ஒன்றிற்கு ஒப்பளிக்கப்பட்ட தொகை ரூ.7 லட்சத்தில் பொதுப்பிரிவு பயனாளி களுக்கு 40 விழுக்காடு மானியத் தொகை ரூ.2.80 லட்சம் மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு 60 விழுக் காடு மானியத் தொகை ரூ.4.20 லட்சம் வழங்கப்படும்.
புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்தல் மற்றும் உள்ளீட்டு மானியம் வழங்குதல் திட்டத்திற்கு 10 ஹெக்டேர் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. ஹெக்டேர் ஒன்றிற்கு ஒப்பளிக்கப்பட்ட தொகை ரூ. 7 லட்சத்தில் பொதுப் பிரிவு பயனாளி களுக்கு 40 விழுக்காடு மானியத் தொகை ரூ.2.80 லட்சம் மற்றும் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு 60 விழுக் காடு மானியத் தொகை ரூ. 4.20 லட்சம் வழங்கப்படும். உள்ளீட்டு மானியமாக ஹெக்டேர் ஒன்றிற்கு ஒப்ப ளிக்கப்பட்ட தொகை ரூ.4 லட்சத்தில் பொதுப் பிரிவு பயனாளிகளுக்கு 40 விழுக் காடு மானியத் தொகை ரூ. 1.60 லட்சம் மற்றும் ஆதி திராவிடர் பயனாளிகளுக்கு 60 விழுக்காடு மானியத் தொகை ரூ.2.40 லட்சம் வழங்கப்படும். மேலும் நீரினை மறு சுழற்சி முறையில் சிறிய அள விலான தொட்டிகள் அமைத்து நன்னீர் மீன் வளர்ப்பு செய்தல் திட்டத் திற்கு பொதுப்பிரிவு பய னாளிகளுக்கு ஒரு அலகு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அலகு ஒன்றிற்கு ஒப்பளிக்கப்பட்ட தொகை ரூ7.50 லட்சத்தில் பொதுப் பிரிவு பயனாளிகளுக்கு 40 விழுக்காடு மானியத் தொகை ரூ.3 லட்சம் மற்றும் ஆதி திராவிடர் பயனாளிகளுக்கு 60 விழுக்காடு மானியத் தொகை ரூ4.50 லட்சம் வழங்கப்படும். மேற்படி நான்கு திட்டத் தில் மானியத் தொகை பின்னேற்பு மானியமாக வழங்கப்படும் எனவும், முதலில் வரும் விண்ணப் பத்திற்கு முன்னுரிமை அளித்து மூப்புநிலை அடிப் படையில் மானியம் பெறு வதற்கு தேர்ந்தெடுக்கப்படு வர். எனவே, மேற்படி திட்டத் தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் எண்: 873-4 அறிஞர் அண்ணா சாலை, கீழவாசல், தஞ்சா வூர் என்ற முகவரியில் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களு டன் டிச.25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.