districts

கருகும் பயிர்களை காப்பாற்றுக சிபிஎம் உண்ணாவிரதம்

வேதாரண்யம், ஆக.5 - ‘

   கருகும் பயிரை காப்பாற்ற தண்ணீர் கொடு, இல்லை யென்றால் நிவாரணம் கொடு’ என்ற முழக்கத்தை முன்வைத்து நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு கடைத்தெருவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  ஒன்றியச் செயலாளர் ராஜா தலைமை வகித்தார். உண்ணா விரதத்தை நாகை மாவட்டச் செயலாளர் மாரிமுத்து தொடங்கி வைத்து பேசினார். கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    போராட்டம் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  உதவி செயற்பொறியாளர் மதியழகன், வேதாரண்யம் துணை காவல் கண்காணிப்பாளர் சுபாஷ்சந்திரபோஸ் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் இரண்டு நாட்களுக்குள்  தலைஞாயிறு பகுதிக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து உண்ணாவிராதம் கைவிடப்பட்டது.