districts

img

சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜன.19 - சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் வெள்ளியன்று கருப்புப் பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிப்படி முறையான பென்சன் வழங்க வேண்டும். குறைந்தபட்ச பென்சன் ரூ.6750-ஐ டி.ஏ.வுடன் வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். ஈமச் சடங்கு தொகை ரூ.25,000 வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் வெள்ளியன்று கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க முன்னாள் மாவட்ட தலைவர் எலிசபெத்ராணி தலைமை வகித்தார். சங்க மாவட்ட தலைவர் சாமிநாதன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன், சங்க மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் சிராஜுதீன், சங்க மாநில துணைத்தலைவர் தங்கவேல் ஆகியோர் பேசினர். முன்னதாக வெஸ்ட்டிரி மேல்நிலைப் பள்ளியில் இருந்து துவங்கிய பேரணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. மாவட்ட பொருளாளர் ஜெயராஜ் நன்றி கூறினார்.