districts

img

மாவட்ட விளையாட்டுப் போட்டி: சர்மிளா காடஸ் பள்ளி முதலிடம்

மயிலாடுதுறை, அக்.9 - பள்ளிக் கல்வித்துறை நடத்திய பாரதியார் மற்றும் குடியரசு தின மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்றன. இதில் மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டனர். இந்நிலையில் சர்மிளா காடஸ் மேல்நிலைப் பள்ளியின் 9 ஆம் வகுப்பு மாணவர் சரண்குமார் 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் அதிக புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 400 மீட்டர் ஓட்டம் ஆகியவற்றில் முதலிடம் பிடித்தார். மேலும் 9 ஆம் வகுப்பு மாணவி ஹாசினி உயரம் தாண்டுதலில் முதல் பரிசு பெற்றார். 11 ஆம் வகுப்பு மாணவன் முகமது அல் அஸ்பர் உயரம் தாண்டுதலில் மூன்றாமிடமும், 12 ஆம் வகுப்பு மாணவி லின்சி ரீனா நீளம் தாண்டுதலில் மூன்றாமிடமும் பிடித்தனர்.  முதல் பரிசுகளை வென்ற இரு மாணவர்களும் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், விளையாட்டு ஆசிரியைகளுக்கும் வெள்ளிக் காசுகள் பரிசளித்து பள்ளி முதல்வர் பாராட்டினர்.