மயிலாடுதுறை, ஏப்.23 -
மயிலாடுதுறை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சாராஸ் மேளா விற்பனை கண்காட்சிக்கான நேர்காணல் ஏப்.24 அன்று நடைபெறுகிறது என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2023 - 2024 ஆம் ஆண்டு சாராஸ் மேளாவினை முன்னிட்டு மகளிர் சுய உதவிக் குழுக்களின் மாநில அளவிலான விற்பனை கண்காட்சி சென்னை தீவுத்திடலில் ஏப்.29 முதல் மே 15 வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியில் மகளிர் சுய உதவிக் குழுவினரின் உற்பத்தி பொருட்களான பனை ஓலையால் செய்யப்பட்ட பொருட்கள், பரிசுப்பொருட்கள், மெழுகுவர்த்தி மற்றும் வீட்டில் செய்யப்படும் சாக்லேட், இனிப்பு பொருட்கள் மற்றும் மண் பானைகள், இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குத்தல் அரிசி, ஊறுகாய், வற்றல், வடகம், பனை வெல்லம், மதிப்பு கூட்டப்பட்ட பனை பொருட்கள், மீன் ஊறுகாய் போன்றவை விற்பனை செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஏப்.29 முதல் மே 15 வரை சென்னை தீவுத்திடலில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான விற்பனை கண்காட்சியில் கலந்து கொள்ள தகுதியான மற்றும் விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களை தேர்வு செய்ய மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மகளிர் திட்டம், கச்சேரி ரோடு, வட்டாட்சியர் அலுவலக வளாகம் (தீயணைப்பு துறை எதிரில்), மயிலாடுதுறை என்ற முகவரியில் நடைபெறும் நேர்காணலில் உற்பத்தி பொருட்களுடன் 25.4.2023 அன்று கலந்து கொள்ள அனைத்து மகளிர் சுய உதவி குழுக்களுக்கும் கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.