புதுக்கோட்டை, நவ.25- புதுக்கோட்டை மாவபடம் கீழையூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடுதல் விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொ) வா.அனிதா தலைமையில் நடைபெற்றது. ஆட்சி தலைவர், புதுக் கோட்டை மாவட்ட முதன் மைக்கல்வி அலுவலர், அறந்தாங்கி மாவட்டக் கல்வி (இடைநிலை) பள்ளி துணை ஆய்வர் அறிவுரையின்படி, மரக் கன்றுகளை நட்டனர். பள்ளியின் தேசிய பசுமைப் படையின் உறுப்பினர் கள் மூன்று குழுக்களாக இணைந்து, பள்ளியின் ஆசிரியர் கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோர் பள்ளி வளா கத்தில் தேக்கு, புங்கை, மகிழ மரக்கன்றுகள், நீர் மருது மரக்கன்றுகள் மற்றும் பூவரசு மரக்கன்றுகள் என 221 மரக்கன்றுகளை நட்டனர்.