districts

img

மன்னார்குடியில் தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, பிப்.16- பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மீண்டும் வழங்க கோரி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிரந்தர துப்புரவுப் பணியிடங்களை ரத்து  செய்ததை திரும்பக் கோரியும், வேலை  நீக்கம் செய்யப்பட்ட 11 ஒப்பந்த தொழிலா ளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும். 58 ஒப்பந்த தொழிலாளர்களின் இபிஎப் கணக்கை உடனே செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர் சங்கம் சார்பில் வெள்ளியன்று மன்னார்குடி நகராட்சி அலுவலகம் முன்பு வேலை நிறுத்த மும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தூய்மைப் பணியா ளர் சங்கத்தின் தலைவர் ஜி.ரகுபதி, மதிப் புறு தலைவர் கே.எஸ்.சிவசுப்பிரமணியன் ஆகியோர் தலைமை வகித்தனர். சங்க  நிர்வாகிகள், நிரந்தர மற்றும் ஒப்பந்த  தூய்மை பணியாளர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். 20.2.2024 அன்று மன்னார்குடி  நகராட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.