districts

img

இரண்டு மாதமாக சம்பளம் வழங்கவில்லை: துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டம்

புதுக்கோட்டை, பிப்.5 - கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காததைக் கண்டித்து துப்புரவுப் பணியாளர்கள் புதுக்கோட்டை  நகராட்சி டிவிசன் அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட் டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளிலும் துப்புரவுப் பணி செய்வதற்காக தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் 288 துப்புரவு ஒப்பந்தப் பணியாளர்கள் வேலை செய்து வரு கின்றனர். இவர்களுக்கு தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் சார்பில் மாதந் தோறும் 12,000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. சம்பளம் முறையாக வழங்கப்படாததால், சிஐடியு  தொழிற்சங்கம் சார்பில் அவ்வப்போது போராட்டம் நடத்திய பிறகு சம்பளம் வழங்குவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து, புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள புதுக்கோட்டை நகராட்சி 7-ஆவது டிவிசன் அலுவல கத்தை முற்றுகையிட்டு 288 ஒப்பந்த  துப்புரவு பணியாளர்களும் போராட்டத் தில் ஈடுபட்டனர்.  புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட் சித் தொழிலாளர் சங்க (சிஐடியு) மாவட்டப் பொதுச் செயலாளர் கே.முக மதலிஜின்னா, துணைத் தலைவர் எம்.முத்தையா ஆகியோர் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. சம்பளத்தை உடனடியாக வழங்க  வேண்டும். பிஎப், இஎஸ்ஐ பிடித்த பணத்தை முறையாக வங்கியில் செலுத்த வேண்டும். துப்புரவு பணி  செய்யும் தங்களுக்கு கையுறை, துடைப்பம் உள்ளிட்ட உபகரணங் களை வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன. நகராட்சி ஆணையர் மற்றும் அதி காரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், ‘கோரிக்கை நிறைவேறும் வரை வேலை செய்யமாட்டோம்’ என  பணியை புறக்கணித்து தொழிலா ளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரு கின்றனர்.