districts

img

அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சியில் வன்முறைத் தாக்குதல்!

மயிலாடுதுறை, டிச.9-  டாக்டர் அம்பேத்கர் நினைவு தின நிகழ்ச்சியை நடத்தவிடாமல் தடுத்து  வன்முறையில் கலவரத்தில் ஈடுபட்ட ஆதிக்க சாதிவெறியர்களுக்கும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க தவறிய மணல்மேடு காவல்துறைக்கும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மயிலாடுதுறை மாவட்டக் குழு கடும் கண்டனத்தை தெரிவித்துள் ளது.  இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மயிலாடு துறை மாவட்ட குழுவின் சார்பில் மாவட்ட தலைவர் எஸ்.இளங்கோ வன், மாவட்டச் செயலாளர் ஜி.ஸ்டா லின் ஆகியோர் வியாழனன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,     மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு காவல் சரகத்திற்கு உட்பட்ட பட்டவர்த்தி பாலம் பேருந்து நிறுத்தம் அருகில் அண்ணல் அம்பேத்கரின் 65ஆவது நினைவு தினமான டிசம்பர் 6 அன்று தலித் சமூ கத்தினர் பேனர் வைத்து மரியாதை செய்ய ஏற்பாடு செய்தனர்.  இதற்கு முன்பாக மணல்மேடு காவல் நிலையத்தில் அனுமதி கோரி பாரதி என்பவர் மனு அளித்திருந்தார். இதற்கு காவல்துறை எந்தவித மறுப்பும் தெரிவிக்காத நிலையில், அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி இருந்தனர்.

இந்நிலையில் ஒரு பிரிவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் தேசிய தலைவ ருக்கு மரியாதை செலுத்துவதை யாரும் தடுக்கக்கூடாது என்றும் பொது இடத்தில் வைத்து மரியாதை செலுத்துவது ஒன்றும் தவறு இல்லை என்றும் அவர்களிடம் எடுத்துக் கூறி சமாதானம் செய்வதற்கான முயற்சி யில் ஈடுபட்டதாக தெரியவில்லை.  ஆனால் அதே இடத்தில் மற்ற தலைவர்களின் படம் வைத்து மரி யாதை செலுத்தப்படும் போது அண்ணல் அம்பேத்கர் அவர்களின் படம் வைத்து மரியாதை செலுத்து வதை மட்டும் ஏன் தடுக்கிறார்கள் என்ற கேள்வி எழுகின்றது. 

காவல்துறையினர் முன் வன்முறைத் தாக்குதல்

தலித் பகுதியினரை மட்டும் அங்கி ருந்து வெளியேற்றவும் அம்பேத்கர் பேனர் வைத்து மரியாதை செலுத்து வதை அனுமதிக்காமல்  காவல்துறை யினர் நடந்து கொண்டதும் அதிர்ச்சி யாக உள்ளது. அண்ணல் அம்பேத்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கொண்டிருக்கும்போது ஒரு தரப்பு ஆண்களும், பெண்களும் கற்க ளை கொண்டு வீசியும் உருட்டுக் கட்டையால் தாக்கியும் வன்முறை யில் ஈடுபட்டனர்.  இந்த சம்பவம் காவல்துறையினர் முன்பாகவே நடைபெற்று இருப்பது வருந்தத்தக்கது. இதில் பலர் காயம டைந்துள்ளனர். காயமடைந்த வர்களை மயிலாடுதுறை அரசு மருத்து வமனையில் உள்நோயாளியாக கூட காவல்துறையினர் அனுமதிக்க வில்லை. ஆனால் வன்முறையில் ஈடுபட்டவர்கள் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.  சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினத்தில் மரியாதை செலுத்தக்கூடிய நிகழ்ச்சியை காவல் துறையினர் பாதுகாப்பு அளித்து நடத்தியிருக்க வேண்டும். எதிர் தரப்பி னரை சமாதானம் செய்து எடுத்துக் கூறி வன்முறைச் சம்பவங்கள் நடை பெறாமல் பாதுகாப்பு நடவடிக்கை யில் காவல்துறை ஈடுபட்டிருக்க வேண்டும். இந்த பிரச்சனையில் காவல்துறை தலித் இளைஞர்களை நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்வதும், வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்துவதும் கண்டிக்கத்தக்க செயலாகும்.

கைதும் பொய் வழக்கும்

மேலும் தாக்குதலுக்கு உள்ளா னவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தலித் இளைஞர்கள் 4 பேரை காவல் துறையினர் கைது செய்து இருப்பது கண்டிக்கத்தக்கது. தலித் இளைஞர் கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனடியாக வாபஸ் பெறவேண்டும். வன்முறையில் ஈடு பட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து  நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்கு தலுக்கு உள்ளாகி காயமடைந்த வர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை பெறுவதற்கும் அவர்களுக்குரிய நிவாரணத்தையும், பாதுகாப்பையும் அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.  இந்த சட்டம் - ஒழுங்கு பிரச்சனை யில் காவல்துறையினரின் சாதி ஆதிக்க பிரிவினருக்கு ஆதரவாகவும் பொறுப்பற்று இருந்ததும் தான் காரணம்  இதற்கு  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மயிலாடுதுறை மாவட்ட குழுவின் சார்பாக வன்மையாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது என கூறினர்.

டிச.13 கண்டன ஆர்ப்பாட்டம்

நிகழ்ச்சியை தடுத்து வன்முறை யில் ஈடுப்பட்ட சாதி ஆதிக்க வெறியர்க ளை கண்டித்தும், கலவரத்திற்கு துணைநின்று சட்டம்,ஒழுங்கை பாதுகாக்க தவறிய காவல்துறையை கண்டித்தும் வருகிற -13 அன்று மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட் டம் முன்னணியின் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமையில் நடைபெறவுள்ளது.  ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார்.