திருச்சிராப்பள்ளி, ஜன.19 - 1982 ஜனவரி 19 இல் நடைபெற்ற முதல் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில், காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான திரு மெய்ஞானம் தியாகிகள் அஞ்சான், நாகூ ரான், மன்னார்குடி ஞானசேகரன் நினை வாக வீரவணக்க புகழஞ்சலி மற்றும் உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளி யன்று டெல்டா மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் தியாகிகள் தினத்தை முன்னிட்டு, முறை சாரா தொழிலாளர்களுக்கு தேசிய நிதி ஆணையத்தை உருவாக்க வேண்டும். குறைந்தபட்ச சம்பளம் மாதம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். அனைவருக் கும் சமூக பாதுகாப்புடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும். நிரந்தர தன்மை கொண்ட வேலைகளில் ஒப்பந்த, அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும். முதலாளிகளுக்கு ஆதரவாக போடப் பட்ட தொழிலாளர் நலச் சட்டத்தொகுப்பு திருத்தப்பட்டதை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு திருச்சி மாநகர் மாவட்டக் குழு சார்பில் வெள்ளியன்று ராமகிருஷ்ணா பாலம் அருகில் தியாகிகள் தின கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐ டியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாநிலக்குழு உறுப்பினர் செல்வி, மாவட்ட பொருளாளர் மணிகண்டன் ஆகியோர் பேசினர். சிஐடியு நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்
சிஐடியு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கம் சார்பில், தஞ்சை விரைவுப் போக்குவரத்துக் கழக பணி மனை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிஐ டியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் புகழஞ்சலி உரையாற்றி னார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில் குமார், வி.தொ.ச மாவட்டச் செயலாளர் ஆர். வாசு, மாவட்டத் தலைவர் பிரதீப் ராஜ்குமார், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள், விரைவுப் போக்குவரத்து சங்க மாநில துணைத் தலைவர் பி.வெங்கடேசன், முருகேசன் அரசு போக்குவரத்து சங்க தலைவர் எம்.ஜீவா, மாட்டு வண்டி சங்க தலை வர் என்.கோவிந்தராஜ், மருந்து விற்பனை பிரதிநிதிகள் சங்க மாவட்ட செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக தியாகி கள் நினைவு உறுதிமொழி ஏற்கப்பட்டது. அரியலூர் சிஐடியு-வின் அரியலூர் மாவட்டம் சார்பில் திருமெய்ஞானம் தியாகிகள் தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப் பட்டது. அரியலூர் சிஐடியு அலுவலகம் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சிஐடியு மாவட்டத் தலைவர் கே.கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பி.துரைசாமி, துணைத் தலைவர் ஆர். சிற்றம்பலம், வாலிபர் சங்க மாவட்டச் செயலர் துரை.அருணன், சாலை போக்கு வரத்து தொழிற்சங்க மாவட்டத் தலை வர் எம்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.