சேலம், ஏப். 7 - சேலம் மக்களவை தொகு தியில் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.எம். செல்வ கணபதியை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். வெங்கடபதி தலைமை வகித் தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் சிறப் புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: மோடி ஆட்சியில் சிறு, குறு தொழில்கள், விவசாயம் அழிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கடந்த 10 ஆண்டு களில், ஜிஎஸ்டி பெயரில் சிறு, குறு தொழில்களை அழித்து கார்ப்பரேட்டுகள் கொழுக்க கொள்கை வகுத்தது மோடி அரசு. உலகத்திலேயே அதிக பட்டினியால் வாழும் மக்கள் இந்தியாவில்தான் உள்ளனர். விவசாயிகள், தொழிலாளி கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும், கடந்த 10 ஆண்டுகளில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள னர். ஆனால், கார்ப்பரேட் முத லாளிகளான அதானி, அம்பானி உள்ளிட்ட பெரு முத லாளிகள் வளர்ச்சி அடைந்துள்ளனர். லலித் மோடி, நீரவ் மோடியை கைது செய்யாதது ஏன்? கிரிக்கெட்டில் ஊழல் செய்த லலித் மோடியிடம் ஏன் அமலாக்கத்துறையினர் செல்லவில்லை? வைர வியா பாரி நீரவ் மோடி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் 12 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு தப்பியோடினார். இதுவரை கடனை திருப்பி அளிக்காமல் வெளிநாட்டில் இருக்கிறார். அவரை அம லாக்கத்துறை பிடிக்க வில்லை?. மாறாக, எதிர்க் கட்சிகளை அழிப்பதையே பாஜக குறிக்கோளாக வைத்துள்ளது. தில்லி, ஜார்கண்ட் முதல்வர்கள், தமி ழக அமைச்சர் உள்ளிட் டோரை சிறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்து வருகின்றனர். எனவே, அம்பானி, அதானி போன்ற முதலாளிகளுக்காக ஆட்சி நடத்தும் ஒன்றிய பாஜக அரசை தோற்கடித்தாக வேண்டும். வெள்ள நிவாரண நிதி யாக ஒரு பைசா கூட வழங்காத பிரதமர் மோடி ஏதோ, தமிழக மக்கள் மீது பாசமாக இருப்பது போல பாசாங்கு காட்டுகிறார். திருச்செந்தூர் வரை வந்து சாமி தரிசனம் செய்த பிரதமர், தூத்துக்குடி மக்கள் வெள்ளத்தில் மிதந்த போது எங்கே சென்றார்? பெரும் நிதிச்சுமை இருந்த போதும், தமிழக முதல்வர் மக்களுக்கு எண்ணற்ற நல்ல திட்டங்களை செய்து வருகிறார். ஒன்றிய அரசின் பங்களிப்பு இல்லாமல், ஒத்து ழைப்பு இல்லாமல் ஒரு மாநில அரசு கடந்த 3 ஆண்டு களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்தியாவின் பொதுத் துறை நிறுவனங்களைக் கையில் வைத்துள்ள மோடி அரசு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவில்லை. ஜிஎஸ்டி என்னும் வரியை விதித்து, நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாஜக அரசு கொள்ளையடித்துள்ளது. மோடி ஆட்சிக்கு வரும் முன்பு சமையல் எரிவாயு விலை ரூ. 480 ஆக இருந்தது. தற்போது ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. மீண்டும் பிரதமராக மோடியை தேர்வு செய்தால், 5 ஆயிரம் ரூபாய்க்கு மாறும். அதே போல் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மட்டும் உயர்ந்து கொண்டே இருந்ததற்கு யார் காரணம்? கொள்ளைக்கார பாஜக ஆட்சி தான் காரணம். பாஜகவிற்கு ஆதரவு அளித்ததற்காக தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டவர் ஜெயலலிதா. அவ ரின் வழித்தோன்றல் என கூறிக்கொண்டு 5 ஆண்டு களாக பாஜகவிற்கு ஆதரவு அளித்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. கைது நடவடிக்கை க்கு அஞ்சி கடந்த அதிமுக அரசு, பாஜகவின் திட்டங் களுக்கு அடிபணிந்தது. தற்போது அவர்கள் பிரிந்து தனித்தனியாக வந்தாலும், இவர்களின் சந்த ர்ப்பவாத நடவடிக்கையை தமிழக மக்கள் தெரியாமல் இல்லை. தமிழகத்தில் ஒரு போதும் இவர்கள் வெற்றிபெற முடியாது. வடமாநிலங்களில் பாஜகவிற்கு எதிரான அலை வீசுகிறது. அவர்களின் கூட்ட ணியில் உள்ளவர்களே பாஜக வுடன் கூட்டணி வேண்டாம் என தெறித்து ஓடுகின்றனர். பாஜகவின் வேட்பாளர்களே போட்டியிட மறுக்கின்றனர். எனவே, மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழ்வது உறுதி, இந்தியா கூட்டணி மகத்தான வெற்றியை பெறும். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் பேசி னார்.